Monday, August 19, 2024

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு ...!

கடந்த 34 ஆண்டுகளாக DPH, DMS & DME ஆகிய மூன்று இயக்குனரகத்தின் கீழ்வரும் மருத்துவமனைகளில் பணியாற்றியதோடு, இறுதியாக சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக தலைமை மருந்தாளுனராகப் பணியாற்றி 18.8.24 அன்றுடன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இந்நிலைக்கு உயர்த்திய நூற்றுக் கணக்கானவர்களின் பெயர்களை இங்கு பட்டியலிட இயலாது என்பதால், பொதுப் பெயரில் குறிப்பிடுகிறேன். பெற்றோர், உடன் பிறந்தோர், உறவுகள், நண்பர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், உடன் பணிபுரிந்தவர்கள், நோயாளிகள், பொது மக்கள் மற்றும் என்னுடைய இயல்போடு என்னை இயங்க அனுமதித்த என் குடும்பத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுநாள் வரை பெற்ற சம்பளத்திற்கு குறைவைக்காமல் பணியாற்ற வேண்டுமென்று நினைத்து இயங்கினேன். இனி, மக்கள் பணத்தில் அரசு அளிக்கும் ஓய்வூதியத்திற்கு குறைவைக்காமல், என்னுடைய மீதமுள்ள வாழ்கையில் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் வாழவேண்டுமென்கிற எனது விருப்பம் நிறைவேற துணைபுரிய வேண்டுமென்று இயற்கையிடம் வேண்டுகிறேன்🙏
நன்றி🙏🙏

- அமைதி அப்பா @ ஜெ. வெங்கடாசலம்.

No comments:

Post a Comment