செவிலியர் கண்காணிப்பாளர் (நிலை 2) ஆக பதவி உயர்வுபெற்று, தாம்பரம்@குரோம்பேட்டை, அரசு மருத்துவமனையில் அண்மையில் பணியில் இணைந்துள்ள
திருமதி ஆர். சுமதி அவர்களை நேற்றைய தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
சகோதரியுடன் 2007 - லிருந்து சுமார் ஐந்து வருடம் தாம்பரம்@குரோம்பேட்டை, அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளேன். பிறகு, மாறுதலில் சென்னை, ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். எனினும், அவர் என்னுடனான நட்பை கைவிடவில்லை. தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
என்னை அறிந்தவர்கள், இராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஏதேனும் உதவிக்கேட்டால், நான் தயங்காமல் தொடர்புகொள்வது இவரைத்தான். என்னிடம் மட்டுமல்ல, அவர் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் பழகும்போது அன்பும், மனிதநேயமும் மேலோங்கியிருக்கும். அவரது பேச்சில் தெரியும் எளிமையும், முகத்தில் தோன்றும் புன்சிரிப்பும் எந்நிலையிலும் யாருக்காவும் மாறாதவைகள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்...!
'உலக செவிலியர் தின'த்தில் தன்னலம் கருதாமல் பணியாற்றும் செவிலியர்களின் சேவைகள், தொய்வின்றி மக்களுக்கு கிடைப்பதற்குரிய சூழ்நிலை, அவர்களுக்கு தொடர்ந்து அமைய வேண்டுமென்று, செவிலியர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏.
No comments:
Post a Comment