Saturday, May 31, 2025

மருத்துவர் இராஜரெத்தினம் திருமண வரவேற்பு.

வேதாரண்யம், அரசு மருத்துவமனை, மருந்தாளுநர் திரு ஆர். ரவிச்சந்திரன் மற்றும் திருமதி கீதா தம்பதியரின் மகனும் பாண்டிச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நரம்பியலில் உயர் சிறப்பு மருத்துவம் (DM -Neurology) பயின்று வரும் மருத்துவர் 
ஆர். இராஜரெத்தினம் MD., (DM) - மருத்துவர் எஸ். ஜீவிதா MBBS அவர்களின் திருமண வரவேற்பு 29.05.25 அன்று ஆயக்காரன்புலத்தில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததோடு, நண்பர்கள் பலரையும் சந்தித்து மகிழ்ந்தேன்.

மணமக்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வாழவேண்டும் என்று வாழ்த்துவதோடு💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏.

Monday, May 12, 2025

உலக செவிலியர் தினம்...!

செவிலியர் கண்காணிப்பாளர் (நிலை 2) ஆக பதவி உயர்வுபெற்று, தாம்பரம்@குரோம்பேட்டை, அரசு மருத்துவமனையில் அண்மையில் பணியில் இணைந்துள்ள 
திருமதி ஆர். சுமதி அவர்களை நேற்றைய தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். 

 சகோதரியுடன் 2007 - லிருந்து சுமார் ஐந்து வருடம் தாம்பரம்@குரோம்பேட்டை, அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளேன். பிறகு, மாறுதலில் சென்னை, ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். எனினும், அவர் என்னுடனான நட்பை கைவிடவில்லை. தொடர்ந்து தொடர்பில் இருந்தார். 

என்னை அறிந்தவர்கள், இராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஏதேனும் உதவிக்கேட்டால், நான் தயங்காமல் தொடர்புகொள்வது இவரைத்தான். என்னிடம் மட்டுமல்ல, அவர் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் பழகும்போது அன்பும், மனிதநேயமும்  மேலோங்கியிருக்கும். அவரது பேச்சில் தெரியும் எளிமையும், முகத்தில் தோன்றும்  புன்சிரிப்பும் எந்நிலையிலும் யாருக்காவும்  மாறாதவைகள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்...!
 'உலக செவிலியர் தின'த்தில் தன்னலம் கருதாமல் பணியாற்றும்  செவிலியர்களின் சேவைகள், தொய்வின்றி  மக்களுக்கு கிடைப்பதற்குரிய சூழ்நிலை, அவர்களுக்கு தொடர்ந்து அமைய வேண்டுமென்று, செவிலியர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு💐,  இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏.