தான் பணியாற்றி ஓய்வுபெறும் பள்ளிக்கு தனது நினைவாக 'வாட்டர் டேங்க்' ஒன்றை நண்பர் ஒருவர் வழங்கிய செய்திதான் அது.
இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட நண்பரைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்வோம், வாருங்கள்!
பட்டுக்கோட்டை கொண்டிக்குளத்தில் வசித்து வரும் திரு. V. செல்வம், M.A., B.Ed. அவர்கள், என்னுடைய சரபோஜி கல்லூரி விடுதி நண்பர். இவர் மத்திய காவல் படையில் (CRPF) Wireless Operator ஆக 1990 முதல் 2012 வரை 23 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வுபெற்றவர்.
தனது இளம் வயது கனவான கல்விப் பணியில் 2014 ஆம் ஆண்டு பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைப் பொருளியல் ஆசிரியராக சேர்ந்தார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி, கடந்த ஏப்ரல் 2026-ல் ஓய்வுபெற்றுள்ளார்.
இவரது மனைவி திருமதி C. தியாகேஸ்வரி, D.Pharm., தற்போது விருதுநகர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் கூத்தாநல்லூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இன்னொருவர் அரசுப் பணிக்கு முயற்சித்துக் கொண்டுள்ளார்.
நண்பர் தொடர்ந்து பல நற்பணிகளை செய்வதற்குரிய உடல்நிலையும் மனநிலையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏