சென்னையில் 'டி. பார்ம்' படிப்பை முடித்து, 1988 - இல் ஊருக்கு வந்த பிறகு, பழைய நண்பர்கள் மூலம் அறிமுகமான குமார் அவர்கள், நான் அரசு வேலையா அல்லது தொழிலா என்கிற குழப்பத்தில் இருந்தபோது, தனது நண்பரான வேலை வாய்ப்பு அலுவகத்தில் பணியாற்றிய அலுவலர் திரு காசிநாதன் அவர்கள் வழியாக, வேலைக்கான அறிவிப்பு எப்போது வரும் என்கிற தகவலை அறிவதற்காக, அவரே பயணச் செலவையும் செய்து, என்னை நாகப்பட்டினம் அழைத்து சென்றார். அவர் தான் பின்னாட்களில் 'புயல் குமார்' என்று அறியப்படுகிற தலைமையாசிரியர் திரு சு. தெட்சனாமூர்த்தி அவர்கள்.
அவரின் ஆலோசனைகள் எனது முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்ததுள்ளன என்றால் அது மிகையாகாது!
நான் வேலையின் காரணமாக பல்வேறு ஊர்களுக்கு மாறுதலில் சென்ற பிறகு, நேரடித்தொடர்புகள் குறைந்தன. எனினும்,
பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை அவ்வப்போது இருவரும் பகிர்ந்துக்கொள்வோம்.
தனது இரண்டாவது மகள் திருமதி தமிழ்நிலவு மதன் அவர்களுக்காக வேதாரண்யத்தில் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கான அழைப்பிதழுடன்,
தமிழ்நிலவு மதன் தம்பதியினர் எங்களது சென்னை வீட்டிற்கு நேரில் வந்து அழைத்தனர். சூழ்நிலையின் காரணமாக எங்களால் விழா நடைப்பெற்ற 1.02.26 அன்று கலந்துக்கொள்ள இயலாமல் போய்விட்டது. எனினும், நண்பர்களிடம் வீடு மற்றும் விழா குறித்து விசாரித்தபோது, பிரமாண்டத்தின் உச்சமாக வீடும், பெரும் திரளாக கூடியிருந்த உறவுகள் மற்றும் நண்பர்களால் விழாவும் சிறப்பு பெற்றதாக தெரிவித்தார்கள்.
நண்பர் குமார் அவர்களிடம் முன் கூட்டியே தகவல் அளித்துவிட்டு 17. 02. 26 அன்று அவர்களது புதிய வீட்டுக்கு சென்றோம்.
நண்பர் ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட என்பதை விளக்கும் விதமாக, கவிதையாக காட்சியளிக்கிறது புதிய வீடு. 'எது மாதிரியும் இல்லாத புது மாதிரி' என்பதற்கான உதாரணமாக திகழ்கிறது வீடு.
புதிய வீட்டில் மகிழ்ச்சி என்றென்றும் நிரந்தரமாக இடம்பிடிக்க வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏