நாம், 'நன்றி' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு பெற்ற உதவியை மறந்துவிடலாமா? என்று அடிக்கடி நினைப்பதுண்டு!
நான் பிறரிடம் பெற்ற உதவிகள் எண்ணற்றவை. அனைத்தும் என் நினைவு அடுக்குகளில் பத்திரமாகச் சேமிக்கப்பட்டுள்ளன.
அதில், நான் முதன்மையாகக் கருதுவது வேதாரண்யத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்த காலம்.
நினைவில் வாழும் அண்ணன் திரு கா. ஆறுமுகம் (CTC) அவர்கள் வீட்டில் தங்கிப் படித்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு உணவளித்த திருமதி மீனா ஆறுமுகம் அண்ணி அவர்களும், அறிவைப் புகட்டிய திருமதி கமலாதேவி அண்ணி அவர்களும் என்றென்றும் நினைவில் உள்ளவர்கள்.
திருமதி கமலாதேவி அவர்களின் கற்பிக்கும் திறன் அபாரமானது. ஆசிரியர் பணியின் மீது அவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பும் அலாதியானது. அவரிடம் பயின்ற நான் ஓய்வுபெற்ற நிலையிலும், அவர் இன்னும் அதே உற்சாகத்துடன் தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்து வருவது அதற்குச் சிறந்த சான்றாகும்.
இரண்டு அண்ணிகளும் அன்று என்னிடம் காட்டிய அதே அன்பை இன்றளவும் மாறாமல் கொண்டிருக்கிறார்கள் என்பது நான் பெற்ற வரம்.
அவர்களது வாரிசுகளாகிய வாய்மேடு திரு ஆ. ரசல் சாக்ரட்டீஸ், திருத்துறைப்பூண்டி திருமதி மணிமலர் முருகானந்தம், வேதாரண்யம் திரு ஆ. பெரியார் அண்ணாநிதி மற்றும் நாகப்பட்டினம் திருமதி தெரசா மணிவண்ணன் ஆகியோரும் எங்கள் குடும்பத்தினர் மீது அதே அன்பைக் காட்டி வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
திரு கா. ஆறுமுகம் & திருமதி மு. கமலாதேவி தம்பதியினரின் பேத்தியும், திரு ஆ. பெரியார் அண்ணாநிதி & திருமதி கீதா தம்பதியினரின் மகளுமாகிய பெ. திவ்யதர்ஷினி மற்றும் மருதூர் தெற்கு, திரு த. முருகானந்தம் & திருமதி அமுதா தம்பதியினரின் மகன் மு. வினோத்ராஜா, DME (Get Start Studio, மருதூர் ) ஆகியோரின் திருமணம் 29.05.2026 அன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது.
விளம்பரத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட இந்தப் புதுமணத் தம்பதியினரின் முயற்சியும் உழைப்பும் வெற்றி பெறுவதோடு, புகழோடும் மகிழ்ச்சியோடும் என்றென்றும் வழவேண்டுமென்று எண்ணற்ற இணையதள நண்பர்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்.
🙏🏻