அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிறந்த போது எங்கள் கிராமத்தில் மகப்பேறு என்பது சர்வசாதாரணமாக வீட்டில் நடைபெறுவது வழக்கம். அதற்கு துணையாக எங்கள் வீட்டருகே வசித்த லோகு என்று அழைக்கப்பட்ட திருமதி லோகாம்பாள் என்பவர் இருப்பார்.
இவர் யாரிடமிருந்து பயிற்சி பெற்றார் அல்லது இவருக்கு முன்னால் யார் இதனை செய்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அப்போது எனக்கு இல்லை. பிறகு, புதிதாக துவங்கப்பட்ட அங்கன்வாடியில் குழந்தைகள் பராமரிப்பாளராகவும் பணியாற்றினார்.
எங்கள் பெற்றோருக்கு பிறந்த ஐந்து பேரில் கடைசியாக பிறந்த தம்பி, பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டான். நஞ்சுக்கொடியை அறுக்கப் பயன்படுத்திய கத்தியிலிருந்த 'துரு'வால் ஏற்பட்ட தொற்றுதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதாக அப்போது எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள்.
பிறகு வந்த பத்து ஆண்டுகளில் குடும்பக்கட்டுப்பாடு தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டதால் பிரசவங்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் வழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.
அங்குள்ள அரசு மருத்துவமனைகளை விரும்பாமல் திருத்துறைப்பூண்டிக்கு செல்வோர் டாக்டர் இந்திரா அவர்களையும் டாக்டர் தமிழரசி அவர்களையும் குறிப்பிட்டு அவர்களிடம் செல்ல ஆரம்பித்தார்கள். பின்னாட்களில் டாக்டர் மதுரம் அவர்களும் டாக்டர் புஷ்பா அவர்களும் இணைந்ததோடு, அனைவரும் மக்களிடையே புகழ் பெற்றனர்.
திருவாரூரில் டாக்டர் மஹாலட்சுமி அவர்களின் சேவையையும் தேடிச்சென்று பெற ஆரம்பித்தனர்.
மேலும், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் V. சந்திரசேகரன் அவர்கள் பிரசவம் பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவராக அப்பகுதி மக்களால் கொண்டாடப்பட்டார் என்பதும் வரலாறு.
பிறகு, வேதாரண்யத்தில் டாக்டர் சுமதி ராமசந்திரன் அவர்கள் புகழ் பெற்றார்.
அதன் பிறகு, நான் சென்னை வந்துவிட்டதால் அப்பகுதியில் சேவை புரியும் மகப்பேறு மருத்துவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியவில்லை.
விழிப்புணர்வும், வாழ்க்கைத் தரமும் உயர ஆரம்பித்த பிறகு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் சென்னை என்று பல்வேறு இடங்களுக்கு தேடிச் சென்று மகப்பேறு மருத்துவ சேவையைப் பெறும் நடைமுறை இப்போது வேதாரண்யம் பகுதி மக்களிடையே உள்ளது.
இப்படியாக அப்பகுதி மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயமாக, இன்று 'அபிநிலா கிளினிக்' என்கிற பெயரில் மருத்துவர் M. அபூர்வநிலா MBBS., DGO., FRM. அவர்கள் திருத்துறைப்பூண்டி, ரயில்வே ஸ்டேசன் ரோட்டில், டாக்டர் மாசிலாமணி தெருவில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கியுள்ளார்.
டாக்டர் M. அபூர்வநிலா MBBS., DGO., FRM. அவர்கள் தனது குடும்பத்தாரின் வழியைப் பின்பற்றி, எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐 நீங்களும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏