இந்த இரண்டு நிகழ்வுகளிலும், எனக்கும் அந்த நோயாளிக்கும் எவ்வித நேரடி சம்பந்தமும் இல்லை. சக ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு நான் ஆதரவாக சென்றதால், என் மீது நோயாளியின் ஆத்திரம் திரும்பியது என்பதை நான் புரிந்துகொண்டேன்.
இருவருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால், மூன்றாவது நபர் தலையிட்டு சமாதானம் செய்யும் போது, சில நேரங்களில் சமாதானம் செய்ய சென்றவர் பாதிப்படைவார்.
இதில் உள்ள மனோதத்துவம் என்னவெனில் “எனக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை; இதில் இவனுக்கு என்ன வேலை?” என்கிற எண்ணம் காரணமாக, பிரச்சினையில் ஈடுபட்டவர் அந்த மூன்றாவது நபர் மீது தனது கோபத்தை வெளிப்படுத்துவார்.
பல இடங்களில் சமாதானம் செய்யச் சென்றவர் 'பாதிக்கப்பட்டார்' என்று செய்திகளில் நாம் படித்திருப்போம்.
தேர்தல் தேதி நெருங்கிவிட்டது. திருவிழா மனநிலையில் மக்கள் மாறியுள்ளனர். இந்நேரத்தில் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதரவு கோரி ஓட்டு கேட்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், எவ்வித கட்சி சார்பும் இல்லாதவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள்.
இந்த முறை பல தொகுதிகளில் சில நூறு ஓட்டுகள் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போலத் தோன்றுகிறது.
அதனால், ஒரு வேட்பாளரை ஆதரித்து செயல்பட்ட நடுநிலையாளர்கள் மீது, தோல்வியடைந்தவர்கள் கோபம் திரும்பக்கூடும். வெற்றி பெற்றவர்கள் இவர்களை திரும்பிக்கூட பார்க்கா மாட்டார்கள்.
.
மேலும், அரசு ஊழியர்கள் கட்சி சார்ந்து செயல்படுவது குற்றம் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இது ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதைப் போன்றது. போலீஸ் பிடித்தால் அபராதம் நிச்சயம் என்பதுபோல், மாட்டிக்கொண்டால் தண்டனை உறுதி.
தேர்தல் என்பது திருவிழா போன்றது. இதில் மகிழ்ச்சி மட்டுமே நிலவ வேண்டும் என்பதே நமது விருப்பம்🙏