நீண்ட தூரம் செல்லும் ஒரு பேருந்தில் நீங்கள் பயணம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுநர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்; உங்களது மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் பேசி, சிரித்து, வழியில் டீ குடித்து மகிழ்ச்சியாக செல்கிறது பயணம்.
பயணத்தின் இடையே, எதிர்பாராத, தவிர்க்க இயலாத காரணத்தால் உங்களுக்கு பிடிக்காத ஒருவர் நீங்கள் செல்லும் பேருந்தை இயக்க ஆரம்பித்து விடுகிறார்.
இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
“இவன் ஓட்டும் இந்தப் பேருந்து மிகப்பெரிய விபத்தை சந்திக்கும்; ஒருவரும் பிழைக்க மாட்டார்கள்” என்று சாபம் விட்டுக் கொண்டே அந்தப் பேருந்திலேயே பயணிப்பீர்களா?
எதிர்திசையில் வரும் வேறு பேருந்தில் ஏறி பயணிப்பீர்களா?
அல்லது, அமைதியாக அமர்ந்து, "இந்த ஓட்டுனர் எச்சரிக்கையாக பேருந்தை இயக்கி நம்மையும் நம்முடன் பயனிக்கும் அனைவரையும் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும்" என்று பிரார்த்தனை செய்வீர்களா?
இறுதியாக, "நான் அவர் சரியாக ஓட்டுகிறாரா என்று அருகில் நின்று கவனித்துக்கொண்டே என்னுடைய பயனத்தை நிறைவு செய்வேன்" என்கிறீர்களா?