'அட்சயதிருதியை' இந்த வார்த்தையை தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. அது குறித்தும் இங்கு நான் எதுவும் எழுதப்போவதில்லை. தங்கம் என்பது தேவை இல்லாத ஆடம்பர பொருள், அது மற்றுமோர் உலோகம் என்பதே எனது எண்ணம். அதற்கு காரணம், எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, 'தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு புத்திசாலித் தனம் கிடையாது' என்று எனக்குள் குடிகொண்டுவிட்ட நாம்பிக்கையை அத்தனை எளிதில் விரட்ட முடியாது என்றே தோன்றுகிறது.
தங்கத்தின் விலையை கடந்த பல ஆண்டுகளாக பார்த்தால் உண்மை புரியும். அதனை முதலில் பார்ப்போம். 2006 வருட இறுதியில்தான் விலையில் ஏறுமுகம் கண்டது. முதலில் கீழ்கண்ட வரைப் படத்தைப் பாருங்கள்.

இதன் விபரம் மேலும் அறிய இங்கே செல்லவும்.
இதனை விபரமாக அறிய இங்கே பார்க்கவும்.
பல்வேறு காலக் கட்டங்களில், தங்கம் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துதான் வந்துள்ளது. எனவே, இப்பொழுது உள்ள விலை ஏற்றமும் தற்காலிகமானதுதான் அல்லது இனி தொடர்ந்து வரும் பல ஆண்டுகளுக்கு இந்த விலையே தொடரும் என்று நினைத்து தங்க நகை வாங்காதவர்கள் மகிழ்ச்சியடையலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது. இது, தங்கம் வாங்க முடியாதவர்களை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே! மற்றபடி அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கியவர்களுக்கு, அவர்களே இனி வேண்டாம் என்றாலும் விடாது இந்த ஆண்டு முழுதும் தங்கம் கொட்டியே தீரும். அதை, யாராலும் தடுக்க முடியாது.
இப்பொழுது புரிகிறதா தலைப்பு எதற்கென்று?!
தங்கத்தின் விலையை கடந்த பல ஆண்டுகளாக பார்த்தால் உண்மை புரியும். அதனை முதலில் பார்ப்போம். 2006 வருட இறுதியில்தான் விலையில் ஏறுமுகம் கண்டது. முதலில் கீழ்கண்ட வரைப் படத்தைப் பாருங்கள்.
இதன் விபரம் மேலும் அறிய இங்கே செல்லவும்.
இதனை விபரமாக அறிய இங்கே பார்க்கவும்.
பல்வேறு காலக் கட்டங்களில், தங்கம் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துதான் வந்துள்ளது. எனவே, இப்பொழுது உள்ள விலை ஏற்றமும் தற்காலிகமானதுதான் அல்லது இனி தொடர்ந்து வரும் பல ஆண்டுகளுக்கு இந்த விலையே தொடரும் என்று நினைத்து தங்க நகை வாங்காதவர்கள் மகிழ்ச்சியடையலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது. இது, தங்கம் வாங்க முடியாதவர்களை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே! மற்றபடி அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கியவர்களுக்கு, அவர்களே இனி வேண்டாம் என்றாலும் விடாது இந்த ஆண்டு முழுதும் தங்கம் கொட்டியே தீரும். அதை, யாராலும் தடுக்க முடியாது.
இப்பொழுது புரிகிறதா தலைப்பு எதற்கென்று?!
