Showing posts with label நிஜம். Show all posts
Showing posts with label நிஜம். Show all posts

Saturday, July 11, 2020

கற்பனை கலந்த நிஜம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, வில்லன் நடிகர் திரு பொன்னம்பலம் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியில் படித்தேன்.

அவருடைய போட்டோவை பார்த்தவுடன், அவர் சினிமாவில் காட்டிய வில்லத்தனம்தான் என் மனதில் தோன்றியது.
கிளைமாக்ஸ் காட்சியில் அவர் அடிபடும்போது, என்ன மனநிலையில் நான் இருப்பேனோ, அந்த மனநிலைக்கு சற்றும் வித்தியாசம் இல்லாத மனநிலைதான்.

இதுவே, கதாநாயக நடிகராக இருந்தால், நாம் அனைவரும் கோவில் கோவிலாக சென்று வழிபடுவதோடு மொட்டை அடித்தல்,  நாக்கை அறுத்தல், விரலை வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்போம்.

இயல்பில் கெட்டவர்கள் நல்லவர்களாகவும் மற்றும்  நல்லவர்கள் கெட்டவர்களாகவும் வேடம் போடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமலில்லை. கற்பனை உலகில் 
ஒருவர் போடுகின்ற வேடத்தை வைத்து,  அவருடைய இயல்பை தீர்மானிக்கிறோம்.

இது மாதிரிதான், நம் வாழ்க்கையிலும் நல்ல கற்பனைவளம் மிகுந்த  கதைசொல்லிகள், எளிதில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால், ஒருவரைப்பற்றி நாம் அறியும் தகவல்களை, நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்தி அவர்களை இனம் கண்டு, அவர்களுக்குரிய முக்கியத்துவம் அளிப்பதுதான் சரியான வழிமுறையாகும்.

இது கொஞ்சம் சவாலான வேலைதான்!