அண்மையில் எனது நண்பருடன் நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததது, பேச்சு பல தளங்களில் பயணித்தது. கடைசியாக வெயில் பற்றிப் பேசினோம். இந்த வெயிலைப் பற்றி விரிவாக பேசினார் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த வெயிலை சமாளிக்க வீட்டில் ஏ.சி. இல்லாமல் வாழமுடியாது என்று நான் கூறினேன், அதற்கு அவரின் பதில் எனக்கு ஆச்சர்யாமாக இருந்தது. “இது வெயிலின் ஆரம்பம், கொஞ்சம் கூடுதலான தாக்கம் நமது உடலில் ஏற்படுத்தும். இதுவரை நாம் மிதமான வெப்பநிலையில் பழகிவிட்டு, திடீரென்று வெப்பநிலையில் மாறுதல் ஏற்படும்பொழுது, நமது உடலில் தடுமாற்றம் ஏற்படுவது இயற்கையே. கொஞ்ச நாட்கள் சென்றுவிட்டால், இந்த வெப்பநிலைக்கு தகுந்தவாறு நம் உடல்நிலை மாறிவிடும். அதுவரை அளவுக்கு அதிகமான நீர் மற்றும் உடலுக்குக் குளிச்சியான பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் உட்க்கொண்டால், வெப்பநிலை மாறுபாட்டிலிருந்து தப்பிக்கலாம்”
மேலும் சில செய்திகளையும் சொன்னார். “கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்(இரட்டையர்கள்) அவர்களின் வீடு, கார் இரண்டிலும் ஏ.சி. இருப்பதால், ஏ.சி.இல்லாத வகுப்பில் பாடம் படிக்க முடியாமல், வருகையைப் பதிவு செய்துவிட்டு காருக்குள் சென்று அமர்ந்துகொள்வார்களாம். இத்தனைக்கும் நன்றாக படிக்கூடிய மாணவர்கள் மேலும் வகுப்பை புறக்கணிக்க விரும்பாதவர்கள். அந்த மாணவர்களின் செயலை எப்படி எடுத்துக்கொள்வது?! வீடு, கார் என்று குளிரில் வாழ்ந்துவிட்டு வகுப்பின் வெப்பநிலையை அவர்கள் உடல் ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதுதான் காரணம்”
நண்பரின் இந்த விளக்கத்தை கேட்டப்பின்பு நானும் என்னுடையக் கருத்தை மாற்றிக்கொண்டேன். இப்பொழு நான் சந்திப்பவர்களிடம் "வெயிலைப் பற்றி கவலைப்படாதீர்கள். கொஞ்சநாளில் நமது உடல் இந்த வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளும் அவசரப்பட்டு ஏ.சி.வாங்கி கஷ்டப்படவேண்டாம். வீடு,கார்,அலுவலகம் எல்லாமே ஏ.சி. என்றால், அது சரியாக இருக்கும்" என்று சொல்லிவருகிறேன்
ஏ.சி. வாங்க விரும்பும் எனது குடும்பத்திற்கான பதிவு இது.
உங்களுக்கு?!