கடந்த சில நாட்களில் நடப்பவைகளை நினைத்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்...
பல்லாவரத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் காரை ஓட்டிச் சென்று, மேலிருந்து
கீழே ரயில்வே பாதையில் விழுந்து அடிபட்ட டிரைவர் பற்றிய செய்தி. அதிர்ஷ்டவசமாக ஹை டென்ஷன் மின்சார கம்பியில் அந்த கார் விழவில்லை, மேலும் அந்த சமயத்தில் தொடர்வண்டி வரவில்லை. இல்லையென்றால் விபத்து எப்படி முடிந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.
முசிறியில் +2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மாயமான செய்தி. பிறகு மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வேறுகதை.
தர்மபுரியில் +2 விடைத்தாளை திருத்திய பிறகு, கிழித்து கழிப்பறையில் வீசிய ஆசிரியையின் செயல்.
வேதாரணியம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில் ரவீந்தரன் என்கிற மாணவனுக்கு, கணிதத்தில் முதலில் 92 மதிப்பெண் போடப்பட்டு பின்பு அது மறுகூட்டலில் 97 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மதிப்பெண்ணும் 473 லிருந்து 478 ஆக உயர்ந்தது.அந்த மாவட்டத்தில் 474 மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்த 35 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது.
ஆனால் மாணவன் ரவிந்த்ரனுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை.
பல வழிகளில் முயற்சித்தும் லேப்-டாப் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் நீதிமன்றம் சென்று லேப்-டாப் கிடைப்பதற்கான நீதிமன்ற உத்திரவும் பெற்றுள்ளான். அதற்கு உதவி புரிந்த வழக்கறிஞர் திரு.காசிநாத பாரதியையும் பாராட்டவேண்டும். இவர் பல பொதுநல வழக்குகளைத் தொடர்பவர் என்பது கூடுதல் தகவல்.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாமே நமக்கென்ன என்ற அலட்சியத்தால் வந்ததுதான்.
பல்லாவரத்தில் அந்த பாலத்தின் முகப்பில் சிறு கல்லைவைத்திருந்தாலோ அல்லது கயிற்றை கட்டியிருந்தாலோ அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.
தபால்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் இருநூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதவேன்டியக் கட்டாயம்.
விடைத்தாளை கிழித்த ஆசிரியைக்கு தெரியுமா அதை எழுதிய மாணவன் மற்றும் பெற்றோரின் தூக்கமில்லா இரவுகளைப் பற்றி?
மாணவன் ரவீந்தரன் விஷயத்துக்கு வருவோம். மாணவன் தேர்வில் கூட்டலை தவறாகப் போட்டால் அவனது வாழ்வு பாழாகும், இங்கு விடைத்தாளில் தவறாகப் கூட்டல் போட்டது ஆசிரியர் ஆனால் அவதிப்பட்டது மாணவன். என்ன வினோதம் பாருங்கள்.
தொலைக்காட்சியில் காசு வாங்கிக்கொண்டு அழுவும் பெண்களைப் பார்த்து அழுவும் நாம், மேலே பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறிது நேரம் வருத்தப்படுவதுக் கூடயில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.
Showing posts with label அசிங்கம். Show all posts
Showing posts with label அசிங்கம். Show all posts
Wednesday, April 21, 2010
Tuesday, March 16, 2010
எங்கே போய் முடியும் இந்த பணமாலை..?!
என்னுடைய கவலையெல்லாம் இந்தியப் பணம் எவ்வளவு பாடுபடுகிறது என்பதுதான். நம் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டு கசங்கிவிட்டால், நமது மனது தாங்கிக் கொள்வதில்லை. கடையில் பொருட்களை வாங்கும்போது, நம் கையிலிருக்கும் புதிய நோட்டை முதலில் கொடுக்கமாட்டோம், தேடிப் பிடித்து பழைய தாளை கொடுப்போம்.
உ.பி.முதல்வருக்கு கோடிகணக்கான ரூபாய் நோட்டில் மாலை அணிவித்தார்கள் என்பதை அறிந்ததும், மனதை என்னவோ செய்கிறது. இந்த ரூபாய் நோட்டு மாலை மற்ற மாநிலங்களுக்கு பரவக்கூடாது, இதுவே எனது விருப்பம். பொறுத்திருந்துப் பார்ப்போம்.
ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை கீழே படிக்கவும்.இது உ.பி. மக்களுக்குத் தெரியாதா?!
Clean note policy:
Reserve Bank of India has been continuously making efforts to make
good quality banknotes available to the members of public.
To help RBI and banking system, the members of public are requested to ensure the following:
Not to staple the banknotes
Not to write / put rubber stamp or any other mark on the banknotes
Store the banknotes safely to prevent any damage
| |||||||
|
| |||||||
|
|
Monday, March 15, 2010
Sunday, January 3, 2010
சென்னையில் வாடகை வீடு....!
நான் சென்னைக்கு வந்த புதிதில் என்னை மிகவும் பாதித்த விஷயம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் . அது வாடகைக்கு வீடு விடும் வீட்டுச் சொந்தக்காரரின் அறிவிப்பு பலகையில் படித்தவையே. ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. (தற்பொழுது to let board வைப்பவர்கள் குறைவு, எல்லாமே புரோக்கர் மயம்) தனது சொந்த செலவில் வீடு கட்டிவைத்திருக்கிறார்கள் , அதில் யாரை தங்கவைக்கவேண்டும் என்பது அவர்களது உரிமை, அதில் தலையிட நீ யார் என்று தோன்றுகிறதா? சரி, நான் அவர்கள் உரிமையில் தலையிடவில்லை. ஆனால் இது போன்ற அறிவிப்புகளினால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்பட போவதில்லை, அதுவும் குறிப்பாக வீட்டை வடகைக்குவிடும் வீட்டுச் சொந்தக்காரருக்கு...! அவரின் நோக்கம் அந்த குறிப்பிட்ட ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார் என்று கருதினால் அது மூடனம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.
இன்றைய தினத்திற்கு எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கும் ஐ.எஸ்.ஐ. போன்றதொரு முத்திரைக்குத்தி இது உயர்வான ஜாதி இந்த ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள் என்று குறிப்பிட முடியாது
என்பதை நாம் அறிவோம்.
இன்னும் சிலர் காவலர்கள்,வழக்கறிஞர்கள்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்த்தவர்கள் போன்றவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இது எல்லாமே தவறுதான்.
பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் அவர் காலத்திலேயே உண்மையென்று நிருபிக்கப்பட்டதற்கு காஞ்சிபுரம் அர்ச்சகருக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் மட்டும் படம் பிடிக்காமல் விட்டிருந்தால் இது மாதிரி குற்றசாட்டைச் சொன்னால் யார் நம்புவார்கள். தெரிந்தது ஒரு தேவநாதன் தெரியாமல் எத்தனை தேவனாதனோ...?! ஏன் தேவனாதனைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்றால் அர்ச்சகர் என்பவர் எப்படி ஒழுக்கமாக இருப்பார் என்று நாம் நம்பிக்கொண்டிருந்தோமோ, அந்த நம்பிக்கையில் மண் விழுந்ததால் அவரைத் தவிர்க்க முடியவில்லை.
ஜாதியோ, செய்யும் தொழிலோ ஒருவரின் குணநலன்களைப் பிரதிபலிக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுபவர்கள் ஒன்றும் படிக்காதவர்களோ ஏழைகளோ அல்ல. இவர்களெல்லாம் திருந்தாவிட்டால் யார் திருந்துவது? எனக்கு தெரிந்து
பிரபல ஆங்கில நாளேட்டில் வேலை செய்யும் நபர், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்ப்படுமென்று அறிவிப்பு வைத்திருந்தார்.
ஜாதிப்பித்து பிடித்து அலையும் மூடர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
தங்களது தாய் தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் அனைவரும் தனது ஜாதியினார்தான். இதுவரையில் அவர்களுக்குக்காக தான் எதை விட்டுக்கொடுத்தோம் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தால் தன்னிடம் உள்ள ஜாதிப் பித்து தானாக தெளிந்துவிடும்.
இன்றைய தினத்திற்கு எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கும் ஐ.எஸ்.ஐ. போன்றதொரு முத்திரைக்குத்தி இது உயர்வான ஜாதி இந்த ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள் என்று குறிப்பிட முடியாது
என்பதை நாம் அறிவோம்.
இன்னும் சிலர் காவலர்கள்,வழக்கறிஞர்கள்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்த்தவர்கள் போன்றவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இது எல்லாமே தவறுதான்.
பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் அவர் காலத்திலேயே உண்மையென்று நிருபிக்கப்பட்டதற்கு காஞ்சிபுரம் அர்ச்சகருக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் மட்டும் படம் பிடிக்காமல் விட்டிருந்தால் இது மாதிரி குற்றசாட்டைச் சொன்னால் யார் நம்புவார்கள். தெரிந்தது ஒரு தேவநாதன் தெரியாமல் எத்தனை தேவனாதனோ...?! ஏன் தேவனாதனைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்றால் அர்ச்சகர் என்பவர் எப்படி ஒழுக்கமாக இருப்பார் என்று நாம் நம்பிக்கொண்டிருந்தோமோ, அந்த நம்பிக்கையில் மண் விழுந்ததால் அவரைத் தவிர்க்க முடியவில்லை.
ஜாதியோ, செய்யும் தொழிலோ ஒருவரின் குணநலன்களைப் பிரதிபலிக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுபவர்கள் ஒன்றும் படிக்காதவர்களோ ஏழைகளோ அல்ல. இவர்களெல்லாம் திருந்தாவிட்டால் யார் திருந்துவது? எனக்கு தெரிந்து
பிரபல ஆங்கில நாளேட்டில் வேலை செய்யும் நபர், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்ப்படுமென்று அறிவிப்பு வைத்திருந்தார்.
ஜாதிப்பித்து பிடித்து அலையும் மூடர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
தங்களது தாய் தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் அனைவரும் தனது ஜாதியினார்தான். இதுவரையில் அவர்களுக்குக்காக தான் எதை விட்டுக்கொடுத்தோம் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தால் தன்னிடம் உள்ள ஜாதிப் பித்து தானாக தெளிந்துவிடும்.
Sunday, October 25, 2009
ஜாதியிம் தமிழக கோவிலும்...!
கடந்த வாரம் வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் என்ற கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் சமூகத்தினரை ஒரு பிரிவினர் மறித்து வன்முறையில் இடுபட்டதாக செய்தித் தாள்களில் படித்தபோது மிகவும் வேதனையடைந்தேன்.
தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளுக்கு தீட்டு பட்டுவிடும். தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளின் சக்தி குறைந்துவிடும். என்பன போன்ற மூட நம்பிக்கைகள் இப்போது இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் திருப்பதியிலோ, மேல்மருவத்தூரிலோ,சபரிமலையிலோ சக்தி குறைந்து விட்டதாக செட்டிப்புலம் கிராம மக்கள் நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
பின் என்னதான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்றிக்கிறது என்று யோசித்தால் நமக்கு அடிமையாக, நமக்கு சேவகம் செய்துகொண்டிருந்தவன் இன்று கல்வி, பொருளாதாரம், நாகரீகம், சிந்தனை போன்றவற்றில் நம்மைவிட மேன்மையான நிலைக்கு சென்றுவிட்டனே என்று தலித்கள் மீது உள்ளூர பொறாமை வந்துவிட்டது என்பதுதான் உண்மையாகயிருக்கமுடியும்.
தலித்களைவிட இவர்கள் மேன்மையானவர்களாக காட்டிக்கொள்ளஅவர்களை ஆலயத்துக்குள் சென்று வழிபடாமல் தடுப்பது ஒன்றே வழியென்ற கேவலமான சிந்தனையை முதலில் கைவிட வேண்டும். உழைத்துமற்றவர்களும் முன்னேறி, தலித்களுடன் போட்டியிட வேண்டும்.
கேவலமான முறையில் நடந்து, தமிழ்நாட்டில் பெரியார், காந்தி போன்றோர் காட்டிச் சென்ற வழியில் நடக்கும் பலருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர். பெரியார் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கவிட்டால் மற்றைய ஜாதி ஹிந்துக்கள் நிலை என்னவாக இருந்திருக்கும் என்றும் சிந்திக்கவேண்டும். தற்பொழுது உள்ள அரசியல் தலைவர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு மக்கள் தொடர்ந்து கோதரர்களாக வாழ வழிகான வேண்டும். இதில் தமிழனாகிய நம் ஒவொருவருக்கும் பங்கு உள்ளது.
வேறு ஒரு வழியும் உள்ளது அதாவது அந்த ஊரோடு தொடர்பு வைத்துள்ள வெளியூர் உறவினர்கள், நண்பர்கள் அந்த மக்களிடம் மேன்மையான சிந்தனை வளர அவர்களுக்கு எடுத்துக்கு கூறி அவர்களின் அறியாமை விலகி மற்ற மக்களோடு மக்களாக சேர்ந்து வழ வழிவகை காணவேண்டும்.
நான் கூட முதலில் காவல் துறையின் உதவியோடு தலித்களை கோவிலுக்குள் அழைத்து செல்லாமல் இருக்கிறார்களே என்று வேதனையடைந்தேன். அது நிரந்தரமான தீர்வல்ல. அந்த மக்களின் அறிவுக்கண்ணை திறக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.
"எனக்கும் ஜாதிப் பேய் பிடித்திருந்தது, அனால் பெரியார் என்ற சாமியார் அதை அடித்துவிரட்டினார்" என்று எனது நண்பர் சொன்னதுதான் இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது.
தலித்கள் கடவுளை வணங்கும்போது மீண்டும் பெரியார் பிறக்கவேண்டும் என்பதையும் சேர்த்து வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.
தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளுக்கு தீட்டு பட்டுவிடும். தலித் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுளின் சக்தி குறைந்துவிடும். என்பன போன்ற மூட நம்பிக்கைகள் இப்போது இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் திருப்பதியிலோ, மேல்மருவத்தூரிலோ,சபரிமலையிலோ சக்தி குறைந்து விட்டதாக செட்டிப்புலம் கிராம மக்கள் நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
பின் என்னதான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்றிக்கிறது என்று யோசித்தால் நமக்கு அடிமையாக, நமக்கு சேவகம் செய்துகொண்டிருந்தவன் இன்று கல்வி, பொருளாதாரம், நாகரீகம், சிந்தனை போன்றவற்றில் நம்மைவிட மேன்மையான நிலைக்கு சென்றுவிட்டனே என்று தலித்கள் மீது உள்ளூர பொறாமை வந்துவிட்டது என்பதுதான் உண்மையாகயிருக்கமுடியும்.
தலித்களைவிட இவர்கள் மேன்மையானவர்களாக காட்டிக்கொள்ளஅவர்களை ஆலயத்துக்குள் சென்று வழிபடாமல் தடுப்பது ஒன்றே வழியென்ற கேவலமான சிந்தனையை முதலில் கைவிட வேண்டும். உழைத்துமற்றவர்களும் முன்னேறி, தலித்களுடன் போட்டியிட வேண்டும்.
கேவலமான முறையில் நடந்து, தமிழ்நாட்டில் பெரியார், காந்தி போன்றோர் காட்டிச் சென்ற வழியில் நடக்கும் பலருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர். பெரியார் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கவிட்டால் மற்றைய ஜாதி ஹிந்துக்கள் நிலை என்னவாக இருந்திருக்கும் என்றும் சிந்திக்கவேண்டும். தற்பொழுது உள்ள அரசியல் தலைவர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு மக்கள் தொடர்ந்து கோதரர்களாக வாழ வழிகான வேண்டும். இதில் தமிழனாகிய நம் ஒவொருவருக்கும் பங்கு உள்ளது.
வேறு ஒரு வழியும் உள்ளது அதாவது அந்த ஊரோடு தொடர்பு வைத்துள்ள வெளியூர் உறவினர்கள், நண்பர்கள் அந்த மக்களிடம் மேன்மையான சிந்தனை வளர அவர்களுக்கு எடுத்துக்கு கூறி அவர்களின் அறியாமை விலகி மற்ற மக்களோடு மக்களாக சேர்ந்து வழ வழிவகை காணவேண்டும்.
நான் கூட முதலில் காவல் துறையின் உதவியோடு தலித்களை கோவிலுக்குள் அழைத்து செல்லாமல் இருக்கிறார்களே என்று வேதனையடைந்தேன். அது நிரந்தரமான தீர்வல்ல. அந்த மக்களின் அறிவுக்கண்ணை திறக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.
"எனக்கும் ஜாதிப் பேய் பிடித்திருந்தது, அனால் பெரியார் என்ற சாமியார் அதை அடித்துவிரட்டினார்" என்று எனது நண்பர் சொன்னதுதான் இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது.
தலித்கள் கடவுளை வணங்கும்போது மீண்டும் பெரியார் பிறக்கவேண்டும் என்பதையும் சேர்த்து வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.
Subscribe to:
Posts (Atom)
