Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Monday, April 2, 2012

உங்கள் வீட்டிலும் ஒரு வீரட் ஹோலி இருக்கலாம்!


இன்று, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு வீரட் ஹோலி-ஐ தெரியாமல் இருக்காது. அவர், அண்மைக் காலமாக மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இதுவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரை யாருடனும் யாரும் ஒப்பிடவில்லை. ஆனால், இன்று அவரை சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். இப்பொழுதான், நானும் யார் இந்த வீரட் ஹோலி? அவர் எப்பொழுது கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்? அவருடைய சாதனை என்னவென்று தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.  2008 -ல் மாலேசியாவில் நடந்த  பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை  போட்டியை வென்ற அணியின் தலைவர் என்பதை அறிந்தேன். அந்தப் போட்டியில் டருவர் ஹோலி (TARUWAR KOHLI) என்பவர் விளையாண்டார் என்பதும், அவர் இப்பொழுதும் சிறாப்பாக விளையாண்டு வருகிறார் என்பதும், இந்த ஹோலியைப் பற்றி தேடும்பொழுது கிடைத்தக் கூடுதல் தகவல்!

வீரட் ஹோலி 2008 முதல் சர்வேதச கிரிக்கெட்டில் விளையாண்டு வந்தாலும், அவர் இந்தளவுக்கு உச்சத்திற்கு வருவார் என்று பெரும்பான்மையினரால் கணித்திருக்க முடியாது. இந்திய அணியிலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதே இதற்கு சான்று. அதே நேரத்தில், அவர் முதல் போட்டியில் ஒரு அதிரடி சதம் அடித்திருந்தால் எல்லோரது கவனத்தையும்  பெற்றிருப்பார். பத்திரிகைகள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சும்மா விட்டுவைத்திருப்பார்களா? ரசிகர்களும் அவர் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள். அனால், அதன் பிறகு இன்றைய உச்சத்தைத் தொட்டிருப்பாரா என்பது கேள்விக்குறி.

சரி, தலைப்புக்கு வருவோம். இப்பொழுது +2 தேர்வு முடிந்து மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைப் பெறவுள்ளது. அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில், உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வாங்காமல் போகலாம் அல்லது உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை  அடையாமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இன்றைக்கு சாதாரண நிலையில் உள்ள  குழந்தைகள், எப்பொழுது வேண்டுமானாலும் சாதனை புரியலாம். அதுவரை பொறுமைக் காத்திடுங்கள். அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் நினைத்த உயரத்தை உங்கள் பிள்ளைகளும் ஒருநாள் அடைவார்கள் என்பதே வீரட் ஹோலி நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். நம் பிள்ளைகள் இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் சாதனைப் புரிவார்கள் என்று நம்புங்கள். இது எனக்கும் பொருந்தும். இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான்  இந்தப் பதிவு!
.

Wednesday, April 6, 2011

அளவுக்கு மீறினால்...?!

மூக்கு முட்ட சாப்பிட்டவனைப் பிடித்துவைத்து மீண்டும் ஒரு விருந்து சாப்ப்பிடச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் உள்ளது, இப்பொழுது நடக்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. வரும் எட்டாம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ளது. டோனி சென்னை வந்து விட்டார். இதைக் கேட்டவுடன், என் மனநிலை மேற் சொன்ன விருந்து சாப்பிட்டவனின் நிலைக்கு சென்றுவிட்டது.

நம்முடைய நீண்ட நாளைய கனவு, இப்பொழுதான் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் ஹீரோக்களாகவும், யாருமே வெல்ல முடியாதவர்களாகவும் திகழ்வதாக நினைத்து மகிழ்ச்சியில் உள்ளோம். இந்நிலையில், நாளை ஐபிஎல்-யில் நமது வீரர்கள் சரியாக விளையாடாமல் போனால், உதாரனத்திற்கு டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடைய இப்போதைய சந்தோஷம் காணாமல் போய்விடுமே! எனவே கிரிக்கெட் ரசிகர்கள், இப்பொழுது உள்ள மகிழ்ச்சியை கொஞ்ச நாள் அனுபவிக்க நினைத்தால், ஐபிஎல் பார்ப்பதை தவிர்க்கலாம் என்பதே என் யோசனை. எனவே இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது என்பதே எனது எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, January 26, 2011

ஏழு லட்சம் குடும்பங்களின் நிம்மதி...?


தேர்வு சமயத்தில் வீட்டிற்கு விருந்தினர் வருகையைக் கூட தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளின் பெற்றோர் விரும்புவதில்லை. இந்நிலையில் அழையா விருந்தாளியாக கிரிக்கெட் வர உள்ளது. அது என்னவோ தெரியல, நம்ப எக்ஸாமுக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு பந்தம். ரெண்டும் சேர்ந்துதான் வரும்.

உலககோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நாளும், நமது மாணவர்களுக்கு +2 தேர்வு தொடங்கும் நாளும் ஒன்றாகவே உள்ளது. தேர்வு முடியும் போது கிரிக்கெட் போட்டியும் முடிந்துவிடும். குறிப்பாக பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்கள்தான் டி.வி.யில் போட்டியைக் காண ஆசைப்படுகிறார்கள். இது பெற்றோருக்கு ஒரு சவாலான விஷயம்தான். இன்று டி,வி.இல்லாத வீடுகளே இல்லை. இந்தக் கிரிக்கெட்டால், +2 தேர்வு எழுதவுள்ள ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் குடும்பங்களில் நிம்மதி கேள்விக்குறிதான். விதிவிலக்காக, ஒரு சில பெற்றோர் நடு வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு பிள்ளையை தனியறையில் "கதவைச் சாத்திக் கொண்டு படி" என்று சொல்வோரையும் நாமறிவோம். டி.வி.யை மூட்டைக்கட்டி வைத்தாலும், எஸ்.எம்.எஸ். மூலம் ஸ்கோர் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் மாணவர்களும் அதிகம். இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இன்னும் கொடுமை, போட்டிகளில் இந்திய அணி தோற்றுவிட்டால் மறுநாள் பரிட்சை அம்போதான்!

ஒவ்வொரு மாணவனுக்கும், இந்தத் தேர்வு ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. ௦.25 மதிப்பெண் கூட பலர் வாழ்க்கையை திசைதிருப்பி உள்ளதை அனைவரும் அறிவோம்.

'' யூசுப்பதானின் அதிரடி ஆட்டம் மூலம் கடைசி 10 ஓவரில் விக்கெட்டுகள் இருந்தால் எந்த ரன் இலக்கையும் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். உலககோப்பைக்கு முன்பு இந்த தொடர் மூலம் இந்த பாடத்தை கற்றுக் கொண்டேன்" இது, நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் டோனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்தாவது ஒரு தினப் போட்டியின் இறுதியில் தெரிவித்தக் கருத்து.

டோனி, வருகிற உலகோப்பை கிரிக்கெட்டிலும் கூட அனுபவம் மூலம் பாடம் படிக்க முடியும். அவருக்கு மீண்டும் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு வரும், அவரும் ஓய்வு பெரும் வரை பாடம் கற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், கிரிக்கெட் பார்த்து தேர்வினை சரியாக எழுதாமல் அனுபவம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்வு வருமா?

மாணவர்கள், இந்த உலககோப்பை போட்டியை பார்ப்பதையும், அது குறித்து விவாதித்து நேரத்தை வீணடிப்பதையும் தவிர்த்தால்தான், பெற்றோருக்கு நிகழ் காலத்திலும், மாணவர்களுக்கு எதிர் காலத்திலும் நிம்மதி கிடைக்கும்.

படம் உதவி:கூகிள்.