Tuesday, April 28, 2020

கரோனா ஆயுதம்...!

கண்னெதிரே எதிரி வந்தான்
கம்பெடுத்தேன் ஓடவில்லை.

கத்தியை எடுத்தேன்
கலவரப்படவில்லை அவன்.

துப்பாக்கியை நீட்டினேன்
தூ என்றான்.

தும்மினேன்...
தூரமாக ஓடி மறைந்தான்! 


உதவும் உள்ளம்!

வேதாரண்யம் ஆசிரியை திருமதி எம். வசந்தா சித்திரவேல் அவர்கள், பல வருடங்களாக பல்வேறு உதவிகளை செய்துவருபவர்.
கஜா சமயத்தில் அவர் செய்த உதவிகள் பல. அதேபோல், கரோனா சமயத்திலும் செய்து வருகிறார். 
முதல்வர் நிவாரண நிதிக்கு 
ரூ. 50,000/- வழங்கி ஆச்சர்யபடுத்தினார்.

 தினந்தோறும், உணவை  தானே சமைத்து  இயலாதவர்களுக்கு அளித்துவருகிறார். மேலும், இன்றைய தினம், தீ விபத்தால் வீட்டை இழந்தவருக்கும், போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் வறுமையால் வாடும் நபருக்கும் தலா ரூ. 5,000/- வழங்கியுள்ளார். 
இவரை பாராட்டுவதோடு தொடர்ந்து பல உதவிகளை செய்ய வாழ்த்துவோம்

இவர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு....

*ஏதோ என்னால் முடிந்தது...

வேதாரண்யம் காந்திநகரில்
வசிக்கும் திரு மணிமாறன்
என்பவரது வீடு எதிர்பாரத 
விதமாக தீக்கிரையானது.
மனைவி மக்களுடன் குடியிருக்க 
தவித்து வந்தவருக்கு 
பலரும் பலவகையில் உதவி 
செய்து வருகின்றனர். 
நான் சார்ந்த அரிமா சங்கம்,
வர்த்தக சங்கம் & ரொட்டேரியன் சங்கம்
உள்ளிட்டவைகளும் உதவிய வேளையில் 
நானும் என் பங்கிற்கு ரூபாய் 5000/-
(ஐந்தாயிரம் மட்டும் )  உதவினேன். மணிமாறன் குடும்பத்தினருக்கு 
ஆறுதலும் சொல்லி வந்தேன்...

 
வண்டுவாஞ்சேரி மாரியம்மன் கோவிலடி, பின்புறம் இரண்டு குழந்தைகளுடன் வசிப்பவர்கள் 
கருணாநிதி -நீலாவதி தம்பதியினர். 
சரபோஜிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்  மகள் 1100 திருக்குறளை 
சர்வசாதாரனமாக ஒப்புவிக்கிறாள். "ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் 1330 திருக்குறளையும் மனப்படமாய் சொல்லி 
தமிழக முதல்வரிடம் பரிசும் பாராட்டும் பெறுவேன்" என நம்பிக்கையுடன் 
கூறுகிறாள். அவளால் முடியும். அத்தனை  சுறுசுறுப்பு. 
இவளால் பெற்றோருக்கு எவ்வித கஷ்டமும் இல்லை. இவளுடைய அண்ணன் ஒருவன் உள்ளான். 
கலாநிதி என்னும் பெயருடைய அவனுக்கு வயது14. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவன்.
பிறந்தது முதல் படுத்த படுக்கையாகவே உள்ளான். ஏழை விவசாயக்கூலிகளான 
பெற்றோர், தங்களால் முடிந்தளவு இருந்த குறைந்தளவு  சொத்தைக்கூட 
விற்று வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் போய்விட்டது. கூலி வேலை செய்து குடும்பம்பத்தை காப்பாற்றி வரும் கருணாநிதிக்கு 
கொரோன ஊரடங்கு பெரிய 
சவாலாய் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் உதவலாம் என எண்ணி அவர்கள் வீடுதேடிப்போய் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி, குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்ததுடன் குடும்ப செலவுக்காக ரூபாய் 5000/-(ஐந்தாயிரம் மட்டும்) வழங்கினேன்.
இப்பொழுது, சமூக ஆர்வலர்கள் பலரும் உதவி வருகின்றனர்... இரண்டு உதவிகளையும் மனமுவந்து மனநிறைவோடு செயதேன்... ஏதோ என்னால் முடிந்தது... இறைவனுக்கு நன்றி