Tuesday, March 1, 2022

வாழ்த்துகள்...!

💐💐💐வாழ்த்துகள்💐💐💐

வேதாரண்யம் பகுதியில் 1970 களில் என்னைப் போன்று பள்ளிக் கல்வியில் பின் தங்கிய/தேர்ச்சி பெறாத மாணவர்களை, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுத்து, பல நூறு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் 'CTC சார்' என்று அழைக்கப்பட்ட, எனது பெரியம்மா வீட்டு அண்ணன் அமரர் திரு கா. ஆறுமுகம் அவர்கள். அவரின் சேவையைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற, அவரது வாரிசுகளில் ஒருவர் இந்நாளில் வந்துள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.

ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி, நினைவில் வாழும் 
திரு கல்யாணசுந்தர தேவர் - 
திருமதி ஞானாம்பாள் தம்பதியினரின் மகன் வழிப் பேத்தியும்,
திரு கா. ஆறுமுகம் - திருமதி மீனா தம்பதியினரின் மகள் வழிப் பேத்தியும், திருத்துறைப்பூண்டி,  விட்டுக்கட்டி வள்ளுவர் தொடக்கப் பள்ளியின் 
தலைமையாசிரியர் 
திரு க. முருகானந்தம் மற்றும் ஆசிரியை திருமதி ஆ. மணிமலர் தம்பதியினரின் மகளாகிய செல்வி மு. அபூர்வநிலா அவர்கள் MBBS தேர்ச்சிப் பெற்று, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் இன்றைய தினம்  பதிவுசெய்து, மருத்துவ சேவையாற்றுவதற்குரிய தகுதியைப் பெற்றுள்ளார். 

டாக்டர் மு. அபூர்வநிலா MBBS அவர்கள் . தொடர்ந்து உயர் கல்வி பெற்று, தனது குடும்பத்தினர் போன்று தன்னலம் கருதாமல் தனது துறையில் முத்திரை பதிக்க வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்.🙏🙏