Friday, September 25, 2009

மகிழ்ச்சியாக இருக்க...!

அடுத்தவர் வருமானத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே
நமக்கு மகிழ்ச்சி....!
.

Thursday, September 24, 2009

நகைச்சுவை


"ரஜினி, விஜய் இரண்டு பேருக்கும் அரசியலுக்கு வருவதில்
என்ன சிரமம்?"

"ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆண்டவன் சொல்லணும்,
விஜய் அரசியலுக்கு வருவதற்கு அவர் அப்பா சொல்லணும்...!"



.

நகைச்சுவை

மருத்துவரிடம்..., நோயாளியின் மனைவி...

"உட்கார்ந்த இடத்த விட்டு எழும்ப மாட்டேங்கிறார் டாக்டர்"

"இவரோட தொழில் என்ன?"

"எம்.ட்டி.சி-ல கண்டக்டரா இருக்கிறார் சார்.

Tuesday, September 22, 2009

காட்சியும் கருத்தும்...!



ஏய்..! மனிதனே
என் வயிற்றைக் கழுவ
எனக்குத் தெரியும்.

உன் அண்ணனின்
வயிற்றைக் கழுவ
உன்னால் முடிந்ததைக் கொடு....!


Sunday, September 20, 2009

போராட்டம் பல விதம்

பால் உற்பத்தியாளர்களின் போராட்ட முறை...!










Saturday, September 19, 2009

டாக்டர் YSR-ஒரு பாடம்



மறைந்த
ஆந்திர முதல்வர் நமக்கு பல பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறார், அவர் உண்மையில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர் என்பது அவர் மறைந்த பின்னரே எனக்கு தெரியவந்தது. அவர் இந்த அளவுக்கு புகழ்ப் பெற்றவர் என்பதும் அவர் மறைந்த பின்னரே உணர்ந்தேன்.
நாம் இன்னமும் சினிமா நடிகர்கள் மட்டுமே கவர்ச்சியானவர்கள் என்று நம்புவதால்தான் விஜய், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர்களை நம்பி, நாமும் நம் தமிழ்நாடும் செல்வதாக ஊடகங்கள் கதை கட்டிக்கொண்டுள்ளது. கவர்ச்சி என்பது சினிமாவில் மட்டும்தான் என்றால் டாக்டர் YSR மறைந்த போது துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்டார்களே, அங்கே எங்கிருந்து வந்தது கவர்ச்சி (கவர்ச்சி என்றால் மனதை ஆக்கிரமிப்பது என்று பொருள் கொள்வோ ofம்) இதன் மூலம் நாம் அறிவது, மக்களுக்கு தொண்டாற்ற அழகிய முகம் தேவையில்லை , சாதாரண முகம் கொண்டவர்கள்கூட மக்களுக்கு தொண்டாற்றினால், அவர்களுக்கு மக்கள் ரசிகர்கலாகிவிடுவார்கள் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
சரி, இனி என்ன செய்ய வேண்டும் நாம் என்ற கேள்வி எழலாம்...! நாம் கட்சி ஆரம்பிக்க முடியாது, நம்மிடம் பணமில்லை எனவே இளைஞர்கள், படித்தவர்கள், நல்லவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் நம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். அங்குள்ள தாதாக்கள், வாரிசுகள் இவர்களை மீறி நாம் என்ன செய்துவிட முடியும் என்று தயங்கக்கூடாது. நாம் ஒருவர் உள்ளேச் சென்று அங்குள்ள இருவரை நல்லவர்களாக மாற்றினால், நமது இலட்சியம் வெற்றி பெரும்.
நண்பர் சரத்பாபு மிக அதிகம் படித்தவர், எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனால், அவர் இனி செய்யவேண்டியது அவரும் அவர் நண்பர்களும்(டாக்டர் YSR பாணியில்) தன்னை ஓர் அரசியல் கட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நல்லது செய்வதற்கு சுழ்ச்சியைப் பயன்படுத்தலாம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.

Thursday, September 17, 2009

அஞ்சலி...!




நேற்று மாலை சென்னையில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் காலமானார்கள்,
அவரைப்பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளின் இறுதியில் வானொலியில்
இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வெகு பிரபலம், அவருடைய வசிகர குரலுக்கு நானும் அடிமை,
நீண்ட நாட்களுக்கு அவருடைய குரலை மட்டுமே அறிந்த நான் ஒரு வாரப் பத்திரிகையில்
அவருடைய புகைப்படத்தைப் பார்த்தேன், அந்த எளிய முகம் அன்று வரை எனது கற்பனையில்
இருந்த முகத்தோடு நீண்ட நாட்களுக்கு ஒத்துபோகவிலை, இது எனக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமாக
இருக்க முடியாது. என்னை சிந்திக்க தூண்டியவர்களில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களும்
ஒருவர், அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம்...!

Wednesday, September 16, 2009

நகைச்சுவை

ஹோட்டலில் ...!
கேஷியர்: "சார், நீங்க பில் பே பண்ணிட்டீங்களா...?"
சா.வந்தவர்: "அமாம் சார்...!"
கேஷியர்: "இல்லையே...!"
சா.வந்தவர்: "நல்லா பாருங்க, நூறு ரூபா கள்ள நோட்டு ஒன்னு இருக்கும்...!"

********** **************** *************

தனியார் மருத்துவ கல்லூரியில்....!
"உங்க பையனுக்கு அப்படி என்ன திறமை இருக்கு டாக்டருக்கு படிக்க வைக்க விரும்புறீங்க...?"
"அவன் கையெழுத்து ரொம்ப கிறுக்கலா இருக்கும்...!"

******** ****** *******

மருத்துவ மனையில்..!
"எனக்கு வரவர ஞாபக மறதி அதிகமாகுது டாக்டர்...!"
"அப்ப முதல்ல எனக்கு பீஸை குடுங்க, நான் வங்க மறந்துடுவேன்...!"

********* ******** *******

Tuesday, September 15, 2009

அனுபவம் பெற்றுத்தந்த வெற்றி....!

சச்சின் அனுபவம் இந்தியாயுக்கு வெற்றியை தேடித்தந்தது...!

Sunday, September 13, 2009

பொறுமை அவசியம் தேவை....!

இனி நான் சிந்திப்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன், அதனால்
உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை....!