நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களால் '6B சார்' என்று அழைக்கப்பட்டவர். எப்போதும் நீதிக் கதைகள் சொல்லி பாடத்தோடு, வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்தவர்.
அவரது பேச்சில் நகைச்சுவை இழையோடும். எவ்விதத்திலும் அடுத்தவர்களின் மனைதப் பாதிக்கும் வகையில் இருக்காது.
1990-ல் நான் ஆயக்காரன்புலம் PHC யில் பணியில் சேர்ந்த சில மாதங்களில், ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது, கைக்காட்டியில் ஆசிரியரைப் பார்தேன். நான் பணியில் சேர்ந்துள்ள விபரம் தெரிவித்தேன்.
"தெரியும்ப்பா, ஆஸ்பத்திரி வந்த ஜனங்க உன்னப் பத்தி பெருமையாப் பேசிகிட்டாங்க. நீ எல்லார்ட்டையும் பொறுமையா, அன்பா பேசுறதா சொன்னாங்க. என்னடோ 'ஸ்டுடண்ட்'ன்னு சொன்னேன்" என்றவர், தொடர்ந்து "நீ சர்விஸ் முழுவதும் இந்த மாதிரி நல்ல பேரோட இருக்கணும்" என்று வாழ்த்தினார்.
1999 - இல் கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது கடைசியாகப் பார்த்தது.
அதன் பிறகு, ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவருடைய வாழ்த்துகள் என்றென்றும் என்னோடு இருக்குமென்று நம்புகிறேன்.
எனது மனைவி திருமதி திலகவதி அவர்களும் ஆசிரியரிடம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment