Tuesday, October 7, 2025

வாழ்த்துகள்💐💐💐

தாம்பரம்@குரோம்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு 2007 -இல் நான் மாறுதலில் வந்த போது அங்கு பணியாற்றியதோடு, தொடர்ந்து எனது நட்புவட்டத்தில் இருக்கும் திருமதி ஆர். அம்சவேணி அவர்கள், தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அடையக்கூடிய உயரி பதவியான 
செவிலியர் கண்காணிப்பாளர் (நிலை - 1) ஆக பதவி உயர்வுபெற்று, கடந்த வாரத்தில் கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இணைந்துள்ளார் என்கிற தகவல் அறிந்திருந்ததால், நேற்றைய தினம் கிண்டி சென்றபோது அவரை சந்தித்து வாழ்த்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

செவிலியர் பணிக்கே உரிய அன்பு, இரக்கம், கனிவு, மனிதநேயம் போன்றவைகளை தன்னகத்தே கொண்டவர் என்பது அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்.  

தனது பணிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகள், தன்னுடன் பணிபுரியம் சக ஊழியர்கள் மற்றும் 
மருத்துவப் பயனாளிகள் என்று அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெறவேண்டும் என்று வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

No comments:

Post a Comment