உடனே எனது நினைவுக்கு வந்தவர் மருத்துவர் செ. நிவேதிதா BDS அவர்கள் தான். ஏனெனில், இவர் படிக்கும் போதிலிருந்து, கிளினிக் தொடங்கியது வரை ஒவ்வொன்றையும் நான் அறிவேன். எப்படியெனில், இவருடைய தந்தையார் தனது மகள்களின் முன்னேற்றம் குறித்து என்னோடு பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இவருடைய தாய்வழி தாத்தா எனக்கு நெருங்கிய நண்பர்.
நேரம் விசாரித்து ஆயக்காரன்புலம் சென்றேன். மருத்துவரின் உதவியாளர் என்னிடம் விசாரித்துவிட்டு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற தகவலையும் சொன்னார். இது மிகப்பெரிய மருத்துவமனைகளில் நோயாளியின் காத்திருக்கும் நேரத்தை, சென்றவுடன் சொல்லும் வழக்கத்தை நினைவுபடுத்தியது.
எனது முறை வந்தபோது, மருத்துவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு வலி பற்றி சொன்னேன். பரிசோதனைக்கு பிறகு Tooth decay இருப்பதைச் சொன்னார். Root Canal, அதாவது வேர் சிகிச்சை குறித்தும், வலி மறப்பு ஊசி (Local Anesthesia)-யின் விளைவுகள் குறித்தும் விளக்கமாக சொல்லிவிட்டு, சிகிச்சையை தொடங்கினார். சிறப்பான சேவை😃. மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் வலி முற்றிலும் சரிபானது. நன்றி, டாக்டர் நிவேதிதா🙏
எனது சிகிச்சைக்கு இடையில் கிடைத்த நேரத்தில், கிளினிக்கில் வந்திருந்த நோயாளிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
மிகவும் பின்தங்கிய கிராமத்திலிருந்து, ஒரு நான்கு வயது குழந்தையை 'பூச்சிப் பல்' சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர். அறிவியல்படி, உண்மையில் பல்லில் பூச்சி இருப்பதில்லை. பல் கெட்டுப்போவது (tooth decay) அதாவது Dental caries.
மேலும், ஒருவர் தனது மருமகளை wisdom tooth அதாவது, ஞானப் பல் என்கிற வயதானப் பிறகு முளைக்கும் பல் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தார்.
பற்களின் முக்கியத்துவம் குறித்து இந்த அளவுக்கு பின்தங்கிய கிராமத்து மக்கள் புரிந்து வைத்துள்ளார்களே என்று மகிழ்ந்தேன்.
பற்களால் நன்றாக மென்று விழுங்கினால் தான், நமக்கு வரும் பெரும்பகுதியான வியாதிகள் தவிர்க்கப்படும் என்பதை நாம் அறிந்திருந்தாலும், பற்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறிவிடுகிறோம்.
ஊரில் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தது முதல் "ஏன், சென்னைக்கு சென்றிருக்கலாமே?"
"பிரபல மருத்துவரிடம் சென்றிருக்கலாமே?" என்று தெரிவித்தவர்களிடம், எனது பதில் விரிவாக இருந்தாலும், இங்கு சுருக்கமாக ...
அமெரிக்கா குடியுரிமைப் பெற்ற உறவினர் ஒருவர், சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வழக்கமுடையவர். சென்னையில் வசிக்கும் நான் பிறந்த கிராமப் பகுதியில் சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தவறில்லை தானே?
மூத்த மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சைப் பெறவேண்டும் என்பது சரியா? இப்படி அனைவரும் நினைத்துவிட்டால் ...
இளம் மருத்துவர்கள் உரிய தேர்வு மற்றும் பயிற்சிக்கு பிறகுதான், சான்றுப் பெற்று மருத்துவம் செய்யத் துவங்குகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை, மருத்துவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இளம் மருத்துவர்களின் பயிற்சிக்கு எனது உடல் பயன்பட வேண்டுமென்று நான் விரும்புவதால், எனது உடல் தானம் குறித்து அவ்வப்போது உரியவர்களிடம் எனது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறேன்!
No comments:
Post a Comment