Saturday, June 6, 2026

நாகை ஆசிரியர் மா.சு. மறைந்தார் ...

வேதாரண்யம் வட்டம், பன்னாள் கிராமத்தைப் பூர்வீகமாகவும், நாகை, தேசிய மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நாகை - புத்தூர், சிவன் வடக்கு வீதியை இருப்பிடமாகவும் கொண்ட திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் 4.06.26 அன்று இயற்கை எய்தினார் என்கிற தகவலை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

நான், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 1999 முதல் 2007 வரை பணியாற்றிய எட்டு ஆண்டுகளில் நாகையில் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றிருந்தேன். அதில் ஆசிரியர் திரு மா. சு. அவர்களின் குடும்பமும் அடங்கும்!

நாகப்பட்டினத்திற்கு குடிவந்த புதிதில் பன்னாள் திரு ச. அன்பழகன் ஆசிரியர் (தலைமையாசிரியர், விக்டரி பள்ளி, பஞ்சநதிக்குளம்) அவர்கள் மூலமாக கிடைத்த ஆசிரியர் திரு மா. சு. அவர்களின் அறிமுகம், குடும்ப நட்பாக மாறியது.

திரு மா. சு. அவர்களின் மருமகன் ஆசிரியர் திரு K. மாரிமுத்து அவர்கள், நடராஜன் தமயந்தி பள்ளியில் எனது மகன் அமைதி விரும்பி படித்தபோது, அவனின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும், நான் நாகையிலிருந்து சென்னைக்கு மாறுதல் பெறுவதற்கு முன்பு, அவரது மருமகள் மருந்தாளுநர் திருமதி R. பூமாதேவி அவர்களுடன் சில மாதங்கள் ஒன்றாகப் பணியாற்றினேன். 

சென்னைக்கு வந்த பிறகு, திரு மா. சு. அவர்களை சந்திக்கும் வாய்ப்பை காலமும் தூரமும் தடுத்துவிட்டன.

தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்ய நினைக்கும் வெள்ளையான, அன்பு நிறைந்த மனதைக் கொண்டவர் என்பதோடு, இவரது வாரிசுகளின் ஒற்றுமையே இவரின் நேர்மையான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment