மருந்தாளுநர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர். மருந்தாளுநர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றியவர்.
அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் குணம் கொண்டவர். இவரின் நண்பர்கள் பலர் எனக்கு நண்பராகிப் போனார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் மறைந்த 'விஜி சார்' -யும் ஒருவர்.
எந்த நேரம் சுறுசுறுப்பாக இருப்பார். இளம் வயதிலிருந்தே, சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொண்டவர். இன்சுலின் போடுவதற்கு தயங்கும் நண்பர்களுக்கு, இவரை உதாரணமாக குறிப்பிடுவது எனது வழக்கம்.
மருத்துவம் சார்ந்த உதவி தேவையென்று இவரை அணுகும் நபர்களுக்கு, தேவையான உதவிகளை செய்யத் தயங்கியதில்லை.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு, ஒருங்கினைந்த விவயசாயம் செய்து வந்ததோடு, மற்றவர்களுக்கு வழிக்காட்டியாகவும் திகழ்ந்தார்.
நான், சென்னை வந்த பிறகும் என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தவர்.
இவர், இன்றைய தினம் தனது 72 -ஆவது வயதில் இயற்கையெய்தினார் என்கிற தகவலை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இந்தத் துயரத்தை தாங்கும் சக்தியை குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்🙏
No comments:
Post a Comment