நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. அதிலும் குறிப்பாக, தாளாளர் திரு. எம். சுல்தானுல் ஆரிஃபீன் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு. "எனக்கு 60 வயதாகிவிட்டது. இன்னும் நான் இதுவரை வாழ்ந்த காலத்தில் 25 சதவிகிதம் வாழ்வேனா என்று எனக்கு தெரியாது. அதுவும், ஆரோக்கியமாகவும் நினைவுகளோடும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேனென்றும் தெரியாது. அதற்குள்ளாக, நம்முடைய பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்பதற்குரிய வேலைகளை செய்து முடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். அறுபதைக் கடந்தவன் என்பதால் அவருடைய பேச்சின் அர்த்தம், எனக்கு நன்றாகப் புரிந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் பிரமாண்டத்தின் உச்சம்! எனினும், இந்நிகழ்வில் நான் கண்ட ஒரு குறையை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எப்போதும் குறைகளை புறம்தள்ளி, நிறைகளை முன்னிருத்துவது எனது இயல்பு. ஆனால், இங்கு மட்டும் அந்த குறையை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பேசியபோதும், பிறகு குழந்தைகள் வெளிப்படுத்திய கலைத் திறமைகளைக் கண்டபோதும், அங்கு வந்திருந்த பெரும்பகுதியான பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், மற்றும் பார்வையளர்களும் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த தவறியது ஒன்றுதான் பெரிய குறையாகும்.
ஒருவரை பாராட்டுவதால், நாம் அவர்களைவிட 'தகுதியாலும் திறமையாலும் குறைந்தவர் என்று அர்த்தமல்ல' என்பதை, நாம் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்...?
No comments:
Post a Comment