Friday, February 27, 2026

CID அன்பழகன்

எங்களது குடும்ப நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தை பூர்வீகமாகவும் சென்னை, அம்பத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு ரெ. அன்பழகன் & திருமதி அ. வசந்தா தம்பதியினரின் இளைய மகன் அ. பிரவின் மற்றும் பட்டுக்கோட்டை வட்டம், மகிழங்கோட்டையை சேர்ந்தவரும், பட்டுக்கோட்டை மெஸ் பிரைவேட் லிமிடெட் -இன் நிர்வாக இயக்குநருமாகிய திரு ஜெ. திருவரசு & திருமதி தி. மேகலா ஆகியோரின் மகள் தி. நிதிலாஸ்ரீ இவர்களின் திருமணம் 20. 02. 26 அன்று ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 மணமக்கள் ஊர்வலம் மற்றும் திருமணம் என்று இரு நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டதோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று பலரை சந்திக்கும் வாய்ப்பும் மற்றும் புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது! 

எங்களது இரு குடும்பங்களும் கருப்பம்புலம் கிராமத்தை பூர்வீகமாக் கொண்டிருந்தாலும், வேலையின் காரணமாக பல ஆண்டுகளாக வெளியூரில் வசித்துக் கொண்டிருக்கிறோம். எனினும், வேதாரண்யம் பகுதியில் 'CID அன்பழகன்' என்று அறியப்படுபவர் மணமகனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

2004 - ஆம் ஆண்டு, எங்களது மகன் அமைதி விரும்பியும், அவர்களது மூத்த மகன் அருண்மொழியும், நமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் ஒன்றாக சேர்ந்தபிறகு, எங்களுக்குள்ளான நெருங்கிய நட்பு தொடங்கியது. 
.
இன்று, ஐ.ஐ.டி. இல் படித்து, அமெக்கரிக்காவில் உயர்கல்வி பயின்று, அங்கேயே பணியாற்றும் மணமகன் திரு அ. பிரவின் எங்களுக்கு அறிமுகமான போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், பிரவின் எங்களுடன் பொழுதைக் கழிக்காமல், வீட்டிலேயே அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார். சின்ன வயதிலேயே மிகவும் பொறுப்பாக இருப்பார்.

பெற்றோரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இரண்டையும் சரியாகப் புரிந்துக் கொண்டு, கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டிலும் அவர்களது இரு மகன்களும் பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மணமக்கள், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்து, பெருவாழ்வு வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

No comments:

Post a Comment