Saturday, August 29, 2026
குரோம்பேட்டை திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார் மறைவு ...!
Friday, July 31, 2026
பக்கத்து வீடு ...!
இரண்டு நாட்களுக்கு முன்பு கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஒரு விளம்பரம் பார்த்தேன்.
அந்தக் காணொளியில் அந்தக் குறிப்பிட்ட வீட்டை மட்டுமே காட்டியிருந்தார்கள். பக்கத்தில் உள்ள வீடுகளையோ, முழுமையான சாலையையோ அவர்கள் காட்டவில்லை. அதனால், பின்னூட்டத்தில் பக்கத்தில் வீடுகள் இருக்கிறதா என்று கேட்டிருந்தேன்.
நான் எதற்காக கேட்டேன் என்கிற காரணம் நேரடியாக மற்றவர்களுக்கு புரியாது. நம்முடைய வீடு இருக்கின்ற இடத்தில் அருகில் இருப்பவர்களின் இயல்பைப் பொறுத்து நம்முடைய அன்றாட வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.
பக்கத்து வீடுகளில் நல்ல இயல்போடு இருப்பவர்கள் இருந்தால், நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி. அதே நேரத்தில் குணக்கேடு உள்ளவர்கள் அமைந்துவிட்டால், நமக்கு ஒவ்வொரு நாளும் சோகம் தான்.
நகரப் பகுதிகளில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அதனால், நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்கிற நிலையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்.
ஒரு வீடு அமைந்துள்ள இடத்திற்கு அருகே பள்ளி, பேருந்து நிறுத்தம், மருத்துவமனை மற்றும் கடைகள் என்று இருந்தால், அந்த இடத்திற்கு மதிப்பு அதிகம். அதே நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சமூக விரோதி நிரந்தரமாக குடியிருந்தால், அந்த இடத்திற்கு மதிப்பு இருக்காது என்பது பலரும் அறிந்த உண்மை. அதனால் தான் பக்கத்தில் வீடு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். அதற்கு அண்டை வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அந்த வீட்டின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.
நல்லதை நினைப்போம், நல்லதையே விதைப்போம்!
Saturday, July 25, 2026
இந்தியன் படமும், எனது அனுபவமும்!
Thursday, July 23, 2026
ஆசிரியர் மறைவு ...!
Wednesday, July 15, 2026
இனி லஞ்சம் கொடுக்க வேண்டாம்...
Sunday, July 12, 2026
ஒரு கிராமத்தின் மகப்பேறு வரலாற்றின் தொடர்ச்சி...
Saturday, July 4, 2026
டாக்டர் K. R. அனந்தகிருஷ்ணன் இல்ல திருமண விழா...
திரு SKV இல்ல திருமண விழாவில் ...
Tuesday, June 9, 2026
வாழ்க்கைப் பாடம்!
Saturday, June 6, 2026
நாகை ஆசிரியர் மா.சு. மறைந்தார் ...
Saturday, May 30, 2026
நன்றி மட்டும் போதுமா?
Monday, May 25, 2026
ஆசிரியர்...
Sunday, May 17, 2026
சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவமனை?!
Thursday, May 14, 2026
தாம்பரம், சித்த மருத்துவர் எஸ். வடுகநாதன் மறைவு!
Wednesday, May 13, 2026
திருமண புரோக்கர்?!
Monday, May 11, 2026
புதிய ஓட்டுநரும் பழைய பயணியும்!
திருமண விழா
Saturday, May 2, 2026
காலம் கடந்து...!
Tuesday, April 28, 2026
எனது நண்பர் CM?!
"நல்லா படிங்கய்யா!" என்று 14 வயதில் உடன் படிக்கும் சக தோழனிடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவர் சொன்னார் என்றால், நம்ப முடிகிறதா?
தனது பெயரோடு, நண்பனின் பெயரும் சேர்ந்து வானொலியில் ஒலிக்க வேண்டுமென்று, நண்பனுக்கு சேர்த்து வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைப் பாராட்டி கடிதம் எழுதியவர்.
அந்த வயதிலேயே, தனது உறவினரான தேத்தாக்குடி அமரர் திரு SK அவர்களின், 'சக மனிதர்களை மதிக்கும்' பண்பைப் பற்றி கூறியவர்.
தேத்தாக்குடியிலிருந்து கருப்பம்புலத்திற்கு தெரியாத காட்டுப் பாதையின் நெடுகிலும், விசாரித்து சக தோழனைப் பார்க்க 10 கிமீ சைக்கிள் மிதித்துக் கொண்டு வீடு தேடி, வாழைப் பழத்துடன் 14 வயதில் வந்த நண்பர் குறித்தான பதிவுதான் இது!
1980-81 கல்வியாண்டில் வேதாரணியம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது, எங்களது அண்ணன் மறைந்த திரு CTC ஆறுமுகம் அவர்களிடம் ஒன்றாக டியூஷன் படிக்க ஆரம்பித்து, சக வகுப்பு தோழராகவும் நண்பராகவும் மாறிய திரு சொ. மாயகிருஷ்ணன் அவர்கள்தான் மேற்கண்ட அனைத்திற்கும் உரியவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நண்பர் ஆங்கிலத்திலும், நான் கணிதத்திலும் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி, CTC அண்ணன் அவர்களிடம் நாங்கள் டியூஷனில் பயின்ற காரணத்தால், அவர் எங்கள் இருவரின் பெயரையும் கரும்பலகையில் எழுதி, வேதாரண்யம் சேது ரஸ்தாவில் வைத்திருந்தது இன்றளவும் நினைவில் பசுமையாக உள்ளது.
அவர் ஆடுதுறையில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, நான் மன்னார்குடி பின்லே பள்ளியில் +2 படித்தேன். அப்போதெல்லாம், எனக்கு அவர் எழுதும் கடிதத்தை அன்புள்ள நண்பர் ஜே.வி.க்கு என்றுதான் ஆரம்பிப்பார். எனது கடிதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி பதில் கடிதம் எழுதுவார்.
ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக அழைக்கப்படும் 'இனிஷியல்' பெயர், மருத்துவத்துறையில் நான் பணியாற்றியபோதும் என்னோடு அது ஒட்டிக்கொண்டது.
18 வயதிற்குள் பணியில் சேர்ந்து 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர், தலைமையாசிரியர், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி 30.04.2026 அன்று நாகை மாவட்டக் கல்வி அலுவலராக பணி ஓய்வுபெறுகிறார்.
என்னிடம் மற்றவர்கள் காண்கிற நற்பண்புகள் பல திரு C.M. அவர்களிடமிருந்து ஒரு வருடம் மட்டுமே உடனிருந்த எனக்கு கடத்தப்பட்டிருப்பதையும், தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் எத்தனையோ நற்பண்புகளை அவர் விதைத்திருப்பார் என்பதையும், நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
அவர் பணியாற்றிய கண்ணுகுடி மேற்கு, கீழக்குறிச்சி, மணக்குடி, நன்னிலம், கட்டிமேடு, திருநெய்ப்பேர், புலிவலம், சென்னை - திருமுடிவாக்கம், தாம்பரம், திருவாரூர் - விலமல் ஆகிய பள்ளிகளில் இவரின் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், DEO-வாக பணியாற்றிய திருவாரூர், அறந்தாங்கி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என்று அனைவரும் அவரின் நற்குணங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மாநில நல்லாசிரியர் விருதும், பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இம்மாதிரியான ஆசிரியர்களின் நற்பண்புகள் காலம் கடந்தும் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்.
திரு C.M.@சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏