Sunday, August 2, 2020

நவீன பொம்மலாட்டக்காரர்கள்!

நம்முடைய சிந்தனையும் செயலும் எப்போதும் ஒன்றாக இருக்கும். ஆனால், சொல்லும் செயலும் அவ்வாறு இருக்கவேண்டுமென்பதில்லை.

பெரும்பகுதியினர், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வார்கள். ஒருவரின் செயல், இடத்திற்கிடம் மாறுபடாது. இதன் காரணமாகவே, பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில், காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
தான் செய்வது தவறு என்று தெரிந்தும்கூட அதிலிருந்து அவர்களால் விடுபடமுடிவதில்லை. 

கெட்டவர்கள் எப்படியோ, அதுமாதிரிதான் நேர்மையானவர்களும் மாறுவதில்லை. அதற்கு நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலைவர்களும், வாழும் எளிய மனிதர்களுமே சாட்சிகள்.

சிறுவயதில் பொம்மலாட்டங்களைப் பார்த்து ரசித்ததும்,  அந்த பொம்மையாட்டுபவரை நினைத்து வியந்துமிருக்கிறேன். ஆனால், அவர்களைப்பார்த்தில்லை. எதிரே வந்திருந்தாலும் அடையாளம் தெரிந்திருக்காது.   நடைமுறை வாழ்க்கையிலும் பலர் பொம்மலாட்டக்காரர்களாக அவதாரமெடுக்கிறார்கள். அவர்களின் கலைத்திறமையைக் காட்ட  சிந்தனையற்ற மனிதர்களை பொம்மையாக்கி ஆட்டுவிக்கிறார்கள்.
 இறுதியில்,  அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் உரிய பரிசை,  பெரும்பகுதியினர் ஏற்றுக்கொள்ளும் கடவுளாலோ அல்லது இயற்கையாலோ  அவரவர் தகுதிக்கேற்ப  வழங்கப்படும்!

2 comments: