Monday, August 31, 2020

கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்படுவது, அடிக்கடி நடப்பதுதான். ஆனால், இந்த சம்பவததை படித்தவுடன், அப்படி யதார்த்தமாக கடந்துபோக முடியவில்லை.

கோயம்புத்தூர் அடுத்து, சூலூர் அருகேயுள்ள ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர், திரு விஜயகுமார் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
இவரின் வயது 24. கடந்த ஆண்டுதான் பணியில் சேர்ந்துள்ளார். 

நிச்சயமாக திறமையானவராகவும், உழைப்பாளியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடியும். பத்தாம் வகுப்பு தகுதிக்குரிய 'விஏஓ' பதவிக்கு இன்றையதினம், பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வரை தேர்வெழுதி பணியில் சேர்ந்துள்ளனர். நான் அறிந்தவரையில், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நேர்மையாக பணியாற்றுவதாக பலரும் சொல்லக் கேட்டு மகிழ்சியடைந்திருந்தேன். 

அந்த இளைஞர், ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று நினைக்கையில், மிகவும் வருத்தமாக உள்ளது. அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
 அந்த இளைஞரை நேர்மையாக பணியாற்றும்படி அறிவுரை சொல்லிருக்கவேண்டியது, அவரின் மூத்த அலுவலர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் கடமையாகும். அப்படி அறிவுரை சொல்ல நாம் தவறுவதால்தான், இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. மேலும், இந்த இளைஞர் பிடிபடாமல் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், இன்னும் 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்திருப்பார். அவருடைய அலுவலகத்திலிருந்து அதுவரை லஞ்சத்தை விரட்ட முடியாது என்பதை நினைக்கும்போது வேதனை இன்னும் கூடுகிறது.

அனைவரும், அவரவர் வருமானத்திற்கேற்ற செலவை செய்து நியாயமாகவும், நேர்மையாகவும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம்!

No comments:

Post a Comment