Showing posts with label ஆலோசனை.. Show all posts
Showing posts with label ஆலோசனை.. Show all posts

Friday, September 7, 2012

To நிர்மலா பெரியசாமி.

வணக்கம் மேடம்,
 'Z தமிழ்' தொலைக்காட்சியில்   'சொல்வதெல்லாம் உண்மை!' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்பு, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் சோகக் கதையைத்  தொடர்ந்துப் பார்த்து, எனது மன  நிம்மதியை இழக்க விரும்பவில்லை. அதனால், விட்டுவிட்டேன். பிறகு, மூன்று கொலைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்ததோடு  கொலைக் குற்றவாளியை அடையலாம் காட்டியதால், தங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகிவிட்டது அறிந்து மகிழ்ந்தேன். தாங்கள் நிகழ்ச்சி நடத்தும் விதமும் பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. மேலும், குறிப்பாக அடுத்தவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.





 சரி இக்கடிதத்தின் நோக்கம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன், ஒருநாள் தங்கள் நிகழ்ச்சியைப்  பார்க்க நேர்ந்தது. அதில் கலந்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டினீர்கள்.  நிகழ்ச்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பேசும் வார்த்தைகளை அப்படியேக் காட்டி வந்தீர்கள். ஆனால்,  இப்பொழுது இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டியுள்ளீர்கள். இது நடந்தது. அப்படியே பார்வையாளர்களுக்கு காட்டினோம் என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், இனி நடக்கப் போவதுப் பற்றி சிந்த்தீர்களா?

நிகழ்ச்சியில் எதிராளியை தாக்க வேண்டும் அல்லது தாக்கலாம் என்கிற மனநிலையை பங்கேற்பவர்கள் மத்தியில், இது உண்டு செய்யாதா?
தங்களை இந்தளவுக்கு மீடியா வரை இழுத்து வந்து இழிவுப்படுத்தி விட்டார்களே என்று நினைப்பவர்கள், கடைசியில் பழி தீர்க்க வன்முறையைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது?
தங்களிடம் வந்தால் பாதுக்காப்பு என்று நினைப்பவர்கள் கூட இனி பயப்பட செய்வார்கள்தானே?
தங்கள் நிகழ்ச்சி ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்லவே. என்னதான் டி.ஆர்.பி.என்றாலும், அதற்காக இப்படியா?

சினிமா , சீரியல் என்று இல்லாமல், நல்ல நிகழ்ச்சி வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான்.
இது போன்ற கைகலப்புகளையோ அல்லது கட்டிப் புரண்டு  சண்டைப்போடும்  காட்சியையோ, இனிக் காட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அப்படிக் காட்டித்தான் ஆகவேண்டும் என்றால்,   'இளகிய மனம் கொண்டோர், இந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்' என்று அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா மேடம்?!

அன்புடன்,
அமைதியை விரும்பும் பார்வையாளன்.

படம்  உதவி: கூகிள்.

Saturday, October 29, 2011

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!


நேரம் கிடைக்கும் பொழுது பதிவை எழுதி டிராப்ட்-ல் சேமித்து வைத்து, பிறகு ஒவ்வொன்றாகா வெளியிடுவது நாம் எல்லோரும் செய்வதுதான். இது ஏனெனில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நமது  பதிவுகள் வெளியாகவில்லை என்றால், நம்மை  பதிவுலகிலிருந்து ஓரம் கட்டி வைத்துவிடுவார்கள். தினம் தோறும் புதிய பதிவர்கள் வரிசைக்கட்டி வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டு தூங்க வேண்டும்' என்பார்கள். அப்படி ஒரு நிலை இன்றைய பதிவர்களுக்கு.




ஒரு சில பதிவர்கள் "என்னிடம் இரண்டு வருடத்திற்கு வெளியிட போதுமான பதிவுகள் டிராப்ட்-ல் உள்ளது" என்று சொல்வதையும் நான் அறிந்திருக்கிறேன். அப்படி என்றால் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது அவர் டிராப்ட்-ல் சேமித்து வைத்திருப்பார் என்று புரிந்துக் கொள்ளலாம். பெரும்பகுதியினர், குறைந்தது பத்து பதிவுகளாவது சேமித்து வைத்திருப்பார்கள். இது நல்ல பழக்கம்தான். ஆனால், இதில் வரும் பிரச்சினைக் குறித்து விளக்குவதே இந்தப் பதிவு.


 மூளையைக் கசக்கி, கை வலிக்க தட்டச்சு செய்து டிராப்ட்-ல் சேமித்து வைத்துவிட்டு, அதனை வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு நாம் சிரமப்பட்டு எழுதிய பதிவை சில நாட்கள் கழித்து படித்தால் அது நமக்கே பிடிக்காமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நாம் எழுதுவதில் முதிர்ச்சி அடைந்திருப்போம் அல்லது  நாம் எழுதிய நேரத்தில் உள்ள சூழ்நிலை மாறியிருக்கும்.


உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்,  கலைஞர் அவர்கள் "கூடா நட்பு கேடாய் முடியம்" என்று  சொன்னபோது  'கூடா(து)  நட்பிற்கு -  ஒரு பார்வை!' என்ற தலைப்பில் பதிவு எழுத ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து விட்டேன். ஆனால், பதிவை வெளியிடாமல் அன்றைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழியில் பதிவை எழுதி வெளியிட்டு வந்தேன். இப்பொழுது அதைப் படித்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இப்பொழுதான் அரசியலில் நட்பே(கூட்டணி) இல்லாமல் போய்விட்டதே. அதனால், அதே தலைப்பில் அரசியல் கலக்காமல், நட்புக் குறித்து மட்டும் எழுதி வெளியிட உள்ளேன்.


நீண்ட  காலம் வெளியிடப்படாமல் பெட்டியில் முடங்கி கிடந்தப் படங்கள், காலம் கடந்து வெளியிடப்படும் பொழுது வெற்றிப் பெறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.


இதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!

.
படம்  உதவி : கூகிள்.