இதற்கு முந்தையப் பதிவில் ஓய்வுப்பெற்ற நண்பர் திரு CM @சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களுக்கு எழுதிய வாழ்த்து செய்தியில், நான் பள்ளியளவில் கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு மிகச் சிறந்த ஆளுமைகள் இருவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
நான் இன்றளவும் எனது மதிப்பெண் குறித்து யாரிடமும் சொல்வதில்லை. ஏனென்றால், மற்றப் பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற்றவன்.
எனக்கு இன்றளவும் நான்கு வரிகளை சேர்த்து மனப்பாடம் செய்ய இயலாது.
அந்த வயதிலும் நான் அப்படித்தான் இருந்தேன். அப்போதுதான், நண்பர் CM என்னிடம் அடிக்கடி "நல்லா படிங்கய்யா" என்பார்.
நாங்கள் இருவரும் 'அய்யா' சேர்த்து பேசிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். இதுவும், நண்பர் CM -யிடமிருந்து வந்ததுதான்.
நான் அடிக்கடி, 'எந்த ஆசிரியராவது வாய்ப்பாட்டை மனப்பாடமாக ஒப்புவித்துவிட்டு, 'வகுப்புக்குள் வா' என்று சொல்லியிருந்தால், அப்போதே என் படிப்பு முடிந்திருக்கும்" என்று சொல்வதுண்டு.
நான் சந்திக்கும் பெற்றோரிடம் சொல்வதெல்லாம், "நல்ல பிள்ளையாக வளர்த்து விடுங்க, அவங்க நன்றாக வாழ்வார்கள்" என்பது மட்டுமே!
வாழ்த்திய ஓய்வுப்பெற்ற மயிலாடுதுறை, DBTR பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி புஷ்பவள்ளி அம்மையார் அவர்களுக்கும், திருமதி உமா மகேஸ்வரி ஆசிரியருக்கும் மற்றும் வாழ்த்தப் போகும் மற்றவர்களுக்கும். மகிழ்ச்சியையும் 😃 நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
No comments:
Post a Comment