அமைதி விரும்பியின் முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பும் உண்டு என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அப்போதே, மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். நாங்கள் சென்னை வந்த பிறகு, அவரின் தொடர்பு குறைந்துவிட்டது.
பின்நாட்களில் நாகப்பட்டினம் மாவட்டம், பஞ்சநதிக்குளம், விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகள் பற்றி நண்பர்கள், முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தபோது, அப்பள்ளியின் முதல்வராக நண்பர்
திரு ச. அன்பழகன் அவர்கள் பணியாற்றுவதை
தனது தொடர் உழைப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகள் என்று அனைவரிடத்திலும் நற்பெயர் பெற்றதன் விளைவாக, இன்றையதினம் தமிழக அரசின் நல்லாசியர் விருதைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றதோடு, எனது வாழ்த்துகளை💐💐💐 இங்கு தெரிவித்து, இனிவரும் காலத்தில் தொடர்ந்து பல சாதனைகளை அவர் நிகழ்த்த வேண்டுமென்று இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏