Saturday, August 12, 2023

நம்பிக்கையளிக்கும் செய்தி!

கடந்த இரண்டு நாட்களாக நண்பர்கள் பலரும் நாங்குனேரி சம்பவம் குறித்தான வருத்தம், கோபம் இரண்டையும் தங்களது கோணத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

அவற்றில் ஒன்று.

சொத்தை உங்களது வாரிசுகளுக்கு கொடுங்கள்;
ஏன், கடனைக்கூட உங்களது வாரிசுகளுக்கு கொடுங்கள்.
ஆனால்,
பகமையை மட்டும் உங்களோடு விட்டொழியுங்கள்; அவற்றை வாரிசுகளிடம் கொடுத்துவிடாதீர்கள். அது உங்கள் இனத்தையே அழித்துவிடும்!

படித்தவுடன் எனது கண்கள் ஈரமானதை இங்கே, மறைக்க வேண்டிய அவசியமில்லை!

இதனிடையே, எதிர்காலம் குறித்து நம்பிக்கையளிக்கும் செய்தியாக, தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறந்த வழிகாட்டுதலை வழங்கும் என்று உறுதியாக நம்பலாம்👍