Thursday, September 30, 2010

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதி காப்போம்!

                
இது   இன்றைய தினமலரில் வந்தப் படம். 
இந்தச் சிறுவர்களின்  ஒற்றுமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் இவர்களின் பெற்றோரும் ஆசிரியரும் இருப்பார்கள் என்பதை அறிவோம். இது ஒரு 'பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என்பது போல், நாடு முழுதும் எல்லோரும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஒரு சில காட்டுமிராண்டிகளின் எண்ணங்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது
என்பதுவே நமது சிந்தனையாக இருக்கட்டும்.