என்னுடன் பணியாற்றிய இருவருக்குள் நடந்த கொடுக்கல் வாங்கலில் நான் தலையிட்டதால் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!
எனக்கு மேலதிகாரியாக இருந்த பெண்மணி பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். தன்னோடு இருப்பவர்களும் தன்னைப் போன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
என்னோடு ஒர் ஆண் கடைநிலை ஊழியராகப் பணியாற்றினார். இவருக்கு அந்த அதிகாரி கடன் கொடுத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது.
ஒரு நாள் அந்த ஊழியர், தான் வாங்கிய கடன் தொகையை என் எதிரில் திருப்பிக் கொடுக்கிறார். அப்போது அந்த பெண் அதிகாரி அதைப் வாங்க மறுத்து, "வேண்டாம், வச்சுங்க!" என்கிறார்.
அதற்கு நான், "வாங்கிக்கங்க மேடம், பின்னாடி அவருக்கு தேவைப்படும் போது கொடுத்து உதவுங்க!" என்றேன்.
அதற்கு அந்த கடைநிலை ஊழியர், "அப்படி ஒரு நெலம எனக்கு வரக்கூடாதுன்னு வேண்டிக்கங்க, சார்" என்றார்.
பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதைப் பலரிடம் கற்றுக் கொண்ட எனக்கு, உதவி பெறும் நிலையில் யாரும் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்தது, அந்த கடைநிலை ஊழியரின் வார்த்தைகள்.
நம்மில் பலர் உதவி கிடைக்கிறது என்பதற்காக, தேவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு நாம் செல்லவேண்டும் என்று நினைத்து, அதன்படி வாழும் அந்த ஊழியருக்கு வாழ்த்துகள் 💐💐💐
அந்தப் பெண் அதிகாரி அந்தப் பணத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். இன்று அந்த ஊழியர் சிறப்பான நிலையில் உள்ளதோடு, இரண்டு நண்பர்களும் வாழ்வில் மகிழ்ச்சியோடும், என்னிடம் அதே அன்போடும் உள்ளார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி! 😃
No comments:
Post a Comment