Sunday, September 26, 2010

அமைதி அமைதி...!

'அமைதி'  இந்த வார்த்தைக்குத்தான் இன்று எத்தனை மவுசு.   எங்கள் வீட்டில்  தினந்தோறும் ஒலிக்கும் சொல்.  ஆனால், இன்று இந்தியாவே இந்த வார்த்தையின் அர்த்தத்தை வெவ்வேறு வார்த்தைகளில் உச்சரிக்கிறது. இந்நிலையில் எனக்கும் ஒரு பதிவு போடுவோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. 


அலகாபாத்  உயர்நீதிமன்றத்தில் வரப்போகும் தீர்ப்பை நினைத்து நாடே கலங்கிப்போய் உள்ளது.  கடவுள், மதம் இது போன்ற விஷயங்களில் கருத்துச் சொல்வதை தவிர்த்து விடுவேன். இங்கேயும் அந்த விஷயங்களைப் பற்றி நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.


எது எப்படியோ இரண்டு பிரிவு தலைவர்களும் அமைதி காக்கும்படி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் திடிரென இப்படி அறிக்கை விடுவதைப் பார்த்தால் இவர்கள் திருந்தி விட்டதாக தோன்றுகிறது.  திருந்தி விட்டார்களா அல்லது நடிக்கிறார்களா  என்பது தீர்ப்பு வந்த பிறகு தெரிந்து விடும். எதுவாக இருந்தாலும் அவர்களின் இந்த அறிக்கைகளை  நிச்சயமாக  நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.

சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், பாதகமாகத் தீர்ப்பு வந்தாலும் ஒரே மாதிரி மன நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டை தொடர்வார்கலேயானால், நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.


நாமும்,  நம்மால் முடிந்த வரை நாட்டில் எந்த விதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கக்கூடாது  என்கிற ஒரே சிந்தனையோடு எழுதுவோம், பேசுவோம். அதன்படியே நடப்போம்!
.

19 comments:

  1. அமைதி வேண்டும்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  2. பார்ப்போம் எனகென்னவோ தீர்ப்பு வரும் என்று தோணவில்லை

    ReplyDelete
  3. சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான பதிவு அப்பா.

    ReplyDelete
  4. அன்பின் அமைதி அப்பா

    நல்ல சிந்தனை - கடைப்பிடிபார்களா

    ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் அமைதி அப்பா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. ராமலக்ஷ்மி said...
    அமைதி வேண்டும்.
    நல்ல பதிவு.//

    தங்களின் பாராட்டுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  6. LK said...
    பார்ப்போம் எனகென்னவோ தீர்ப்பு வரும் என்று தோணவில்லை//

    பார்ப்போம். தங்கள் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான பதிவு அப்பா.//

    எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. cheena (சீனா) said...
    அன்பின் அமைதி அப்பா
    நல்ல சிந்தனை - கடைப்பிடிபார்களா
    ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் அமைதி அப்பா
    நட்புடன் சீனா//

    தங்களின் பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. //நாட்டில் எந்த விதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கக்கூடாது என்கிற ஒரே சிந்தனையோடு எழுதுவோம், பேசுவோம். அதன்படியே நடப்போம்!//

    அதே!!

    ReplyDelete
  10. //சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், பாதகமாகத் தீர்ப்பு வந்தாலும் ஒரே மாதிரி மன நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டை தொடர்வார்கலேயானால், நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.//

    அருமையான கருத்து அமைதி அப்பா..

    ReplyDelete
  11. ஹுஸைனம்மா said...
    /நாட்டில் எந்த விதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கக்கூடாது என்கிற ஒரே சிந்தனையோடு எழுதுவோம், பேசுவோம். அதன்படியே நடப்போம்!/

    அதே!! //

    நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  12. அமைதிச்சாரல் said...
    /சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், பாதகமாகத் தீர்ப்பு வந்தாலும் ஒரே மாதிரி மன நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டை தொடர்வார்கலேயானால், நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்./

    அருமையான கருத்து அமைதி அப்பா..//

    பாராட்டுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  13. பெயருக்கேற்ற பதிவு.. நன்றி... ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  14. RVS said...
    பெயருக்கேற்ற பதிவு.. நன்றி... ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.//

    தங்களுடைய பாராட்டுக்கு நன்றி ஆர்விஎஸ் சார்.

    ReplyDelete
  15. தற்போதைக்கு அமைதியே தேவை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

    வெங்கட்.

    ReplyDelete
  16. வெங்கட் நாகராஜ் said...
    தற்போதைக்கு அமைதியே தேவை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

    வெங்கட்.//

    தங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  17. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  18. என்றைக்கு அமைதி... என்ற சொல் எந்த பாடசாலைக்கும் தேவையில்லையோ... அன்றைக்கு உலகமே அமைதியாகிவிடும்... என சொல்லாமல் சொல்லியிருக்கும் அமைதி அப்பாவுக்கு....ஒரு சலாம்....போடலாம்...

    ReplyDelete
  19. Puriyatha Puthir said...

    என்றைக்கு அமைதி... என்ற சொல் எந்த பாடசாலைக்கும் தேவையில்லையோ... அன்றைக்கு உலகமே அமைதியாகிவிடும்... என சொல்லாமல் சொல்லியிருக்கும் அமைதி அப்பாவுக்கு....ஒரு சலாம்....போடலாம்...//

    தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete