Tuesday, November 20, 2018

புயல் பாதித்த பகுதி மக்களுக்கோர் வேண்டுகோள் ... !

ஒரே நாள் இரவில் உள்ளூரிலேயே அகதிகளாகிவிட்ட உங்களை சந்திக்க,
வெளியூர்களில் வசிக்கும் உங்களின் சொந்தங்களும், நட்புகளும், பரிதவிப்போடு, நெஞ்சம் படபடக்க  கைகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுடனும், கண்களில் கண்ணீருடனும்,  ஒரு சிலர் செய்யும் சாலை மறியலால், நடு ரோட்டில் காத்துக் கிடக்கிறார்கள்.
இன்னும் பலர், இந்த தகவல் அறிந்ததால் அங்கு வரும் பயணத்தை தள்ளி வைத்துள்ளார்கள்.

உங்களுடைய பாதிப்பை வெளியுலகத்திற்கு தெரிவிப்பதற்கும், மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட உங்களை மீட்க,  இந்த உறவும் நட்பும் அங்கு வருவது அவசியமென்பதை சிந்தியுங்கள்.

கஜா செய்ததை நீங்களும் செய்ய வேண்டாம். விவேகமற்ற வீரம் ஆபத்தானது என்பது வரலாற்று உண்மை.

உங்களின் காதுகளுக்கு இது வந்தடையுமா என்று தெரியவில்லை. ஆனால், நமது சந்ததியினரின் கண்ணில்படும் என்கிற நம்பிக்கையில்..

1 comment:

  1. யார்மீதோ கோபம் நம்மையே பாதிக்கும்

    ReplyDelete