Wednesday, May 13, 2026

திருமண புரோக்கர்?!

நாங்கள் குரோம்பேட்டையில் குடியிருந்த போது, பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண்மணிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர். இருவரும் வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தது. அதனால், “என் பிள்ளைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” என்று அந்த பெண்மணி கண்ணீர் மல்க என் மனைவியிடம் அடிக்கடி வருந்துவார்.

அந்த நிகழ்வுகளை என் மனைவி என்னிடம் சொல்லும் போதெல்லாம், “இதற்கெல்லாம் இவ்வளவு வருந்துவார்களா?” என்று நான் நினைத்துக் கொள்வேன்.

என் மகனின் திருமணமும் பெரிய அளவில் பெண் தேடல் இல்லாமலேயே எளிதாக முடிந்துவிட்டதால், திருமணமாகாத பிள்ளைகளின் பெற்றோருடைய மனநிலையை அப்போதும் என்னால் முழுமையாக உணர முடியவில்லை.

இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் பல்கிப் பெருகுவதற்கான அமைப்பை இயற்கையே ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மனித இனம் பல்கிப் பெருகுவதற்காக திருமணம் என்ற அமைப்பையும் இயற்கை உருவாக்கியுள்ளது.

ஒருகாலத்தில் திருமணம் செய்து வைப்பது புண்ணிய செயல் எனக் கருதி, பலர் அதை சேவையாகச் செய்து வந்தனர். ஆனால், இன்று அது பல்லாயிரக்கணக்கில் பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டது.

பெரும்பாலான புரோக்கர்களிடம் நேர்மை இல்லை. “மேட்ரிமோனி” எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் பணத்தைப் பெறுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சில புரோக்கர்கள், தாங்கள் கூறுவதை பெற்றோர் ஏற்கவில்லை என்றால் அந்தக் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், சில பெற்றோர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்பி திருமணத்தைத் தடை செய்வது பழங்காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை பின்வரும் பாடல் உணர்த்துகிறது:

“தம்பதி சேர்க்கை தடை செய்த தீயோர்க்கு
கண்ணது இருளாகி, நாவதும் முடங்கி,
செவியதும் செத்துப் பிச்சைதேடி அலைய,
அந்திம காலத்தில் அருந்துயர் சேரும்.”

இப்பாடலின் பொருள் — திருமணத்தைத் தடை செய்பவர்கள் இறுதிக் காலத்தில் குருடாகி, ஊமையாகி, செவிடாகி, பிச்சையெடுத்து பெருந்துயரம் அனுபவிப்பார்கள் என்பதாகும்.

அதே நேரத்தில், நேர்மையான புரோக்கர்களும், திருமண தகவல் மையங்களும் இன்றும் இயற்கைக்கு பயந்து, அதை ஒரு சேவையாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர்.

அதில் புதிய முயற்சியாக, ஜோதிட திலகம் திரு. M. திருப்பதிராஜன் M.C.A., அவர்கள் “ஸ்ரீ காலபைரவர் திருமண தகவல் மையம்” என்கிற திருமண சேவையைத் தொடங்கியுள்ளார்.

நேரிடையாக அவர்களே தொடர்பு கொள்வதை இலவச சேவையாகவும்,
 பொருத்தமான ஜாதகம் பரிந்துரை செய்வதைக் கட்டண சேவையாகவும் வழங்குகிறார். 

இவர் எனது நீண்டகால நண்பர். நேர்மையானவர்; பேராசையற்றவர்; இயல்பிலேயே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.

இவரின் இந்த திருமண சேவை மையம் தனது சேவையில் தனித்த முத்திரையை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டிக் கொள்கிறேன் 🙏

No comments:

Post a Comment