Sunday, December 14, 2025

'போத்து' நாவல் வெளியீடு!

சென்னை, தொழிலதிபர் திரு குணசேகரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் அன்பளிப்பாக 'ஒரக்குழி' நாவலை அளித்தேன். அதனை, அன்று இரவே ஒரே மூச்சாக  திரு குணசேகரன் அவர்கள் படித்து முடித்ததாக தெரிவித்தார்.  இரண்டு நாட்களுக்கும் மேலாக திருமண வேலையில் மூழ்கிய களைப்பையும் தாண்டி  இது சாத்தியமா என்கிற சந்தேகம் என் மனதினுள் எழுந்தபோது, நாவலைப் பற்றி அவர் விரிவாகப் பேச ஆரம்பித்ததும் நம்பிக்கை வந்தது. 

எனது சிறு வயதில் அறிந்து, தற்போது மறந்திருந்த தஞ்சாவூர் வட்டார வழக்குகளை எனக்கு நினைவூட்டிய நாவல் ஓரக்குழி. மேலும், பல்வேறு தளத்திலிருந்தும் பாராட்டுதலைப்பெற்ற ஒரக்குழி நாவலின் ஆசிரியர் திரு வானவன் அவர்களிடமிருந்து மற்றும் ஒரு படைப்பாக இன்று வெளிவருகிறது 'போத்து' என்கிற நாவல். இது ஒரக்குழியின் சாதனையை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதோடு, பல்வேறு சிறப்புகளையும் சாதனைகளையும் புரிய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்💐💐💐

No comments:

Post a Comment