ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் ஒரு ரூபாய் செலவில்லாமல் தனது பணப்பயனைப் பெற்றுள்ளார் என்கிற தகவலும், பட்டா மாற்றம், மருத்துவமனைக்கு சான்றிதழ், பள்ளிக்கு சான்றிதழ் என்று எதற்கும் பணம் கொடுக்கவுமில்லை அவர்கள் கேட்கவுமில்லை என்கிற தகவல்களை நண்பர்கள் சொல்வது ஆச்சரியம் அளிப்பதோடு, மகிழ்ச்சியளிக்கிறது.
1996-இல் இந்தியன் படம் வந்தபோது தாத்தா கமலின் படத்தை எனது அலுவலக கதவின் உட்புறம் மறைவாக ஒட்டியிருந்தேன். இதனை அப்போது என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் அறிவார்கள்.
நேற்று என்னிடம் பேசிய நண்பர் ஒருவர்,
"எங்களது சகோதரர்களுக்கு இடையே நடந்த குடும்பப் பிரச்சினையில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலரால், எங்களது குடும்பப் பிரச்சினை தீர்வடையாமல், ஆளுக்கொரு புறமாக இருக்கிறோம்" என்றவர்.
"நான் யாருக்கும், எப்போதும் லஞ்சம் கொடுத்ததில்லை. இனி அப்படி கேட்பவர்களை Spy Camera -வில் பதிவு செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவேன்!" என்றார்.
சில ஊழியர்கள் அரசின் லஞ்சமற்ற நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் செய்வதாக, சமூக ஊடகத்தில் செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது.
நீங்கள் வேலையில் இருக்கும் வரைதான் மரியாதை எல்லாம் கிடைக்கும். லஞ்ச வழக்கில் மாட்டிக் கொண்டால் வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே!
No comments:
Post a Comment