Sunday, May 17, 2026

சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவமனை?!

நேற்றைய தினம் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் வந்துள்ள செய்தி குறித்தான பதிவு. 

இதனை நான் இங்கு பதிவு செய்வதன் நோக்கம், பல ஆண்டுகளாக என் மனதில் உள்ள வருத்தத்தை வெளிப் படுத்துவதற்காக மட்டுமே. மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி!

நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ‘ஸ்ட்ரெச்சர்’ மற்றும் ‘வீல் சேர்’ ஆகியவை, பல மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல அதிகமாக பயன்படுத்தப்படுவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

இந்த ‘ஸ்ட்ரெச்சர்’ மற்றும் ‘வீல் சேர்’ ஆகியவை மனிதர்களின் எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், 200 முதல் 300 கிலோ வரை பொருட்களை ஏற்றி எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதால், அவை விரைவில் சேதமடைந்து பயனற்றதாகி விடுகின்றன. 

இதன் விளைவாக, நோயாளிகளே அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் பொருட்களை ஏற்றி எடுத்துச் செல்ல தனித்தனி ‘டிராலி’களை வாங்கி பயன்படுத்தினால், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
மேலும், பத்திரிக்கை செய்தியை ChatGPT உதவியுடன் தமிழில் சுருக்கமாக கீழே தந்துள்ளேன். 

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தினமும் சுமார் 12,000 வெளி நோயாளிகளுக்கும் 3,000 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. 

ஆனால், CT Scan மற்றும் MRI பரிசோதனைகளுக்கு நீண்ட நேர காத்திருப்பு, ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல் சேர் பற்றாக்குறை, நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் நோயாளிகளை அவதிப் படுத்துகின்றன. 

மேலும், சுகாதாரமற்ற கழிப்பறைகள், செயலிழந்த டயாலிசிஸ் மற்றும் குடிநீர் வசதிகள், சேதமடைந்த கட்டமைப்புகள் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையே சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளது என்பதே செய்தியின் மையக் கருத்தாகும்.

No comments:

Post a Comment