அவர்கள் இன்று காலை, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்கிற தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
10.05.26 அன்று பாண்டிச்சேரியில் நீண்ட நேரம் அவருடனே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைய தினம், அவர் மிகவும் இயல்பாக இருந்தார்.
மிகவும் நல்ல மனிதர். தன்னால் மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பார். மாணவப் பருவத்திலேயே அமைதியான சுபாவம் கொண்டவர்.
நண்பர் திருத்துறைப்பூண்டி, கருவேப்பஞ்சேரி காலம்சென்ற நெல் வியபாரி திரு. S. சுப்பிரமணியன் அவர்களின் மூத்த மகனாவார். மேலும்,
திரு. S. கந்தசாமி மற்றும் திரு. S. ராமானுஜம் ஆகியோரின் சகோதரரும்,
சென்னை திரு. சரத் அவர்களின் தந்தையுமாவார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment