Showing posts with label நகைச்சுவை.. Show all posts
Showing posts with label நகைச்சுவை.. Show all posts

Wednesday, April 13, 2011

என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

அப்பாடா, ஒருவழியா ஒட்டுப் போட்டு கையில மைய வச்சிகிட்டு வந்தாச்சி. முடிவு தெரிய இன்னும் முப்பது நாள் காத்துக் கிடக்கணும். முடிவு வர்றப்ப, கிட்டதிட்ட நாம எப்போ ஓட்டுப் போட்டோம்ன்னு மறந்து போயிடும்!

இப்படி ஒரு மாதம் கழிச்சி ஒட்டு எண்ணுவதால், என்ன லாபம் அப்படின்னு மட்டும் இங்கே பார்ப்போம்.

1 .மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.

2 . ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.

3 . 'வெற்றிப் பெற்றால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது. தோல்வியடைந்தால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது' என்று
இந்த கால அவகாசத்தில் சிந்தித்து, இரண்டுக்குமே அறிக்கை தயார் செய்து வைத்து விடலாம். இதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது,
வெற்றிப் பெற்ற சந்தோஷத்திலோ, தோல்வியடைந்த வருத்தத்திலோ அறிக்கையை மாற்றி வெளியிடும் அபாயம் உள்ளது.

4 . கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கைகளும், பதிவர்களும் இந்தக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கும் மேலே
உள்ள மூன்றாவது 'பாரா' பொருந்தும்.

5 . முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!

6 . எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கலாம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

Monday, November 8, 2010

நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

போர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க.
பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்னு கஸ்ட்டமர் திட்றது வேற கதை!

எனக்கு நகைச்சுவையாகப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். நகைச்சுவை என்பது பெரும்பகுதி மற்றவர்களை கிண்டல் கேலி செய்வதுதான்.
கௌண்டமணி செந்தில் காலம் முதல் வடிவேல் காலம் வரை ஒருவர் மற்றவரை அவமானப்படுவது(அடி, உதை) மட்டுமே நகைச்சுயாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவையாகப் பேசுவதில் பல வகை உண்டு.
நம் அருகில் இல்லாதவரைக் கிண்டல் செய்து பேசுவது.
தன்னையே கிண்டல் செய்து கொள்வது.
எதிரில் உள்ளவரைக் கிண்டல் செய்து பேசுவது.

முதல் வகையில், சிலர் எப்போதும் அருகில் இல்லாதவரைப் பற்றியோ, அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ கிண்டல் செய்து பேசுவார்கள். கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்படி பேசுபவரை 'சிரிப்பாக பேசுவார்' என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுப்பார்கள்.

இரண்டாம் வகை தம்மைப் பற்றியோ தம் குடும்பத்தைப் பற்றியோ(பட்டிமன்ற நகைச்சுவை) கிண்டல் செய்து பேசுவது; இதையும் ரசித்து சிரிப்பார்கள்.

மூன்றாம் வகை இதுதான் அபாயகரமானது, தம் எதிரில் இருப்பவரைக் கிண்டல் செய்வது. இதைப் பெரும் பகுதியினர் ரசிப்பதில்லை(உண்மையாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் விதிவிலக்கு)
மற்றவர்களைக் கிண்டல் செய்து பேசுவதை ரசிப்பவர்கள். தாங்கள் கிண்டல் செய்யப்படும் பொழுது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இதனால் நட்பில் முறிவு கூட ஏற்படும் என்பது எனது அனுபவ உண்மை.

நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!

.