Wednesday, April 13, 2011

என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

அப்பாடா, ஒருவழியா ஒட்டுப் போட்டு கையில மைய வச்சிகிட்டு வந்தாச்சி. முடிவு தெரிய இன்னும் முப்பது நாள் காத்துக் கிடக்கணும். முடிவு வர்றப்ப, கிட்டதிட்ட நாம எப்போ ஓட்டுப் போட்டோம்ன்னு மறந்து போயிடும்!

இப்படி ஒரு மாதம் கழிச்சி ஒட்டு எண்ணுவதால், என்ன லாபம் அப்படின்னு மட்டும் இங்கே பார்ப்போம்.

1 .மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.

2 . ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.

3 . 'வெற்றிப் பெற்றால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது. தோல்வியடைந்தால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது' என்று
இந்த கால அவகாசத்தில் சிந்தித்து, இரண்டுக்குமே அறிக்கை தயார் செய்து வைத்து விடலாம். இதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது,
வெற்றிப் பெற்ற சந்தோஷத்திலோ, தோல்வியடைந்த வருத்தத்திலோ அறிக்கையை மாற்றி வெளியிடும் அபாயம் உள்ளது.

4 . கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கைகளும், பதிவர்களும் இந்தக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கும் மேலே
உள்ள மூன்றாவது 'பாரா' பொருந்தும்.

5 . முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!

6 . எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கலாம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

20 comments:

  1. no man's land போல இது no man's time.

    ReplyDelete
  2. பதிவுலகம் வந்து, டென்ஷன் குறைய நம் பதிவுகளை எல்லாம் வாசிக்கலாம். ஹி,ஹி,ஹி,ஹி,....

    ReplyDelete
  3. //முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!//

    அரசு செலவில் அப்படீன்னு ஓபனா சொல்ல வேண்டியது தானுங்களே!!!!!!

    ReplyDelete
  4. ஆட்சியில இப்ப இருக்கவங்க, ஜெயிலின் வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம். (ஒருவேளை பின்னர் அவசியப்பட்ட்டால்?)

    அப்புறம், இப்பவே சுருட்ட வேண்டியது, மடிக்க வேண்டியது, ஒளிக்க வேண்டியதுகளைச் செஞ்சுடலாம்.

    சட்டங்களில் தேவையான ஓட்டைகள் போட்டுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  5. இவ்வளவுதானா,இன்னும் இருக்கா?!

    ReplyDelete
  6. ராமலக்ஷ்மி said...

    :)!

    :-)))))?????!

    நன்றி மேடம்.

    ReplyDelete
  7. தேர்வு/தேர்தல் முடிந்தது.ஒரு மாதம் கோடை விடுமுறை சார்,ரிசல்ட் வரும் வரை அனைத்து தரப்பினரும் அமைதி,மகிழ்ச்சி,ரிலாக்ஸ் இருக்க வைத்த தேர்தல் கமிழுனுக்கு நன்றி

    ReplyDelete
  8. ramalingam said...
    // no man's land போல இது no man's time.//

    நன்றி சார்.

    ReplyDelete
  9. கக்கு - மாணிக்கம் said...

    // :))))))) //

    நன்றி சார்.

    ReplyDelete
  10. Chitra said...

    பதிவுலகம் வந்து, டென்ஷன் குறைய நம் பதிவுகளை எல்லாம் வாசிக்கலாம். ஹி,ஹி,ஹி,ஹி,....//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  11. //இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்//

    கொள்ளை அடித்த பணத்தையா...

    ReplyDelete
  12. DrPKandaswamyPhD said...

    //முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!//

    அரசு செலவில் அப்படீன்னு ஓபனா சொல்ல வேண்டியது தானுங்களே!!!!!!///

    ஒன்னும் புரியலையே!

    ReplyDelete
  13. @@ஹுஸைனம்மா : நன்றி மேடம்.

    @@வெங்கட் நாகராஜ் : நன்றி சார்.

    @@சென்னை பித்தன் : நன்றி சார்.

    @@manivannan : நன்றி சார்.

    @@அருள்நன்றி : சார்.

    @@சிவகுமார் ! : நன்றி சார்.

    ReplyDelete
  14. எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல் பார்க்கலாம் என்பது அப்பட்டமான உண்மை.. நல்ல சிந்தனை. ;-)))

    ReplyDelete
  15. RVS said...
    எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல் பார்க்கலாம் என்பது அப்பட்டமான உண்மை.. நல்ல சிந்தனை. ;-)))//

    பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  16. எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல் பார்க்கலாம் என்பது அப்பட்டமான உண்மை.. நல்ல சிந்தனை. ;-)))//
    ஹா, ஹா,உண்மைதான்.

    ReplyDelete