Saturday, August 1, 2020

தொலைபேசியும் நானும்...!

நேரமில்லாததாலும், உடல்நிலை ஒத்துழைக்காததாலும்(தொடர்ச்சியாகப்பேசினால் காதில் இரைச்சல் வருகிறது) உறவு மற்றும் நட்புகளிடம் தொலைபேசியில் பேசுவது குறைந்துவிட்டது.

நம் ஒவ்வொருவருக்கும், தொலைபேசியில் பேசுமளவுக்கு குறைந்தது 300 உறவினர்கள் மற்றும் நண்பர்களாவது இருப்பார்கள். 
தினம்தோரும் ஒருவரிடம் பேசினால்கூட, மீண்டும் பேசுவதற்கு குறைந்தது ஒரு வருடமாகும். 

இந்தக்கணக்கு புரியாமல், நாம் பேசுவதில்லை என்று சிலரும், நம்மிடம் சிலர் பேசுவதில்லையென்று நாமும் நினைத்துக்கொள்கிறோம். 

வேலையெல்லாம் முடித்துவிட்டு
ஓய்வாக, ஒருவரிடம் பேசுவோமென்று நினைத்து, அவர் இப்பொழுது நம் அழைப்பை ஏற்கும் நிலையில் இருப்பாரா என்று யோசித்து, அழைத்தால் அவர் 'பிசி'யாகவோ அல்லது எடுக்காமலோ போய்விடுவார். 
நாமும் உடனே அடுத்தடுத்த நபர்களுக்கு ஃபோன் செய்து கடைசியாக ஒருவர் எடுத்துவிட்டால் நம்மால், தொடர்ந்து பேச முடியாத அளவிற்கு, நாம் முன்னே அழைத்தவர்களின் அழைப்பு வந்துக்கொண்டேயிருக்கும். பேசிக்கொண்டிருப்பவரிடமும் சரியாக பேச முடியாது. 

எனவே, இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு பேருக்கு ஃபோன் செய்யலாம். அப்படி, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லையென்றால், நாம் வேறு வேலைப்பார்க்கலாம். அவசியமான செய்தியென்றால் எஸ்எம்எஸ்-ல் விபரம் தெரிவிக்கலாம். நான் அனுபவத்தில் கற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment