Tuesday, July 21, 2020

நாம்தான் காரணம்...!

நேற்றைய தினம், சென்னையில் மாடியிலிருந்து விழுந்து இறந்த முதுநிலை மருத்துவ மாணவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை இடைவிடாது சுற்றிக்கொண்டிருக்கிறது. 
அவர் இறந்ததற்கான காரணம் எதுவாயினும் அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு வினாடி நேரத்தில் தன்னை அழித்துக்கொண்டதோடு
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அந்த மாணவரின் உழைப்பையும் தியாகத்தையும் சேர்த்தே அழித்துவிட்டார். 
 
இந்த சமூகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது. இதற்கு இந்த சமூகமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

 மேற்படி, மாணவர் நிச்சயமாக தன்னுடைய பிரச்சினைகளை வெளியில் சொல்லாவிட்டாலும், அவருடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
அதனையறிந்து  அவரது உறவினர்களோ, நண்பர்களோ ஆலோசனையும் ஆறுதலையும் தெரிவிக்க தவறிவிட்டதாகவே கருதுகிறேன்.

இப்பொழுதெல்லாம், மற்றவர்களைப்பற்றிய அக்கறை என்பது நம்மிடையே குறைந்துவருவதே இதற்கெல்லாம் காரணம். ஒருவரைவொருவர் நலம் விசாரிப்பது என்பதெல்லாம் இப்பொழுது குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கெல்லாம் காரணமாக நான் கருதுவது, 'ஸ்மார்ட்போன்'தான்.

நம் அருகில் இருப்பவர்களை விட்டுவிட்டு எங்கேயோ தொலைதூரத்தில் உள்ளவர்கள்தான் நமக்கு நண்பர்களாக தெரிகிறார்கள். 'ஆன்லைன்' விளையாட்டில் நம்முடைய பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறோம். அதனால், குடும்பத்தினரையோ மற்றவர்களையோ நலம் விசாரிப்பதற்கும் அனுசரணையாக பேசுவதற்கும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

எது எப்படியோ, இது மாதிரியான இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் அனைவரும் உணரவேண்டிய நேரமிது!

No comments:

Post a Comment