Tuesday, July 28, 2020

நம்பிக்கை தரும் ஓவியம்!

இந்த ஓவியம் சென்னை, குரோம்பேட்டையில் ஒரு பள்ளி வளாகத்தில், ஆறு மாதங்களுக்கு முன்பு வரையப்பட்டது. எப்பொழும் பரபரப்பான சாலையில் அந்தப் பள்ளி உள்ளதால், நான் நின்றுகூட சரியாக பார்க்கமுடிந்ததில்லை.
எனினும், ஊரடங்கு சமையத்தில் நின்று பார்த்து வியந்ததோடு, படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தப்படத்தை வரைந்தது எம். பவித்ரா, எட்டாம் வகுப்பு என்றுள்ளது. இது மாணவி பவித்ராவின் சிந்தனையில் தோன்றியதா அல்லது வேறு ஓவியத்தைப் பார்த்து வரைந்தாரா என்று தெரியவில்லை.
எல்லா தகுதிகள் இருந்தும், பிறரின் உழைப்பில் வாழ நினைப்பவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் ஓவியமிது.

 இந்தப் பள்ளியில் பயிலும், பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்த எண்ணத்தை விதைக்க, இதனை சுவற்றில் வரைய முடிவெடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி!

No comments:

Post a Comment